History of Vaccine!



-டி.ரஞ்சித்

தடுப்பூசி பிரச்னை

இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவரும் விஞ்ஞானியுமான எட்வர்ட் ஜென்னரைத்தான் ‘தடுப்பு மருந்தின் தந்தை’ என்கிறார்கள். 1796ல் இவர் பெரியம்மையைத் தடுக்க உருவாக்கிய தடுப்பூசிதான் பின்னர் பல்வேறு தடுப்பூசிகளின் கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக இருந்தது. எட்வர்ட் ஜென்னர் இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே இதுகுறித்து பலர் சிந்தித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் துசிடிடஸ். கிரேக்க தத்துவ அறிஞரான இவர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

‘ஒருவருக்கு ஒரு நோய் வந்தால், அது மீண்டும் பீடிப்பது அபூர்வம். அப்படியே தாக்கினாலும், அது முன்பிருந்த பாதிப்புகளை ஏற்படுத்தாது...’ என்றார். இவர் இப்படி கூறக் காரணம் இருக்கிறது. இவரது காலத்துக்கு முன்பே உலகில் பிளேக் என்னும் கொள்ளை நோய் இருந்திருக்கிறது. மனிதர்களும் இதனால் கொத்துக் கொத்தாக இறந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் புவியின் வெப்பம் இயல்பாக உயர்ந்ததில் பிளேக் நோயை உண்டாக்கிய ஒருவகை கறுப்பு எலிகள் மறைந்தன அல்லது ஒழிந்தன.

பிளேக்குக்குப் பிறகு, மரணத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து நரவேட்டையாடிக் கொண்டிருந்த தொற்றுநோய், பெரியம்மைதான். இது, மத்திய காலங்களில் தன் ஆட்டத்தை தொடங்கியது. அப்போதுதான் எட்வர்ட் ஜென்னர் சீனுக்கு வருகிறார். ஆனால், ஜென்னரின் கண்டுபிடிப்பில் உள்ள பிழையை மருத்துவர்கள் இன்று கண்டறிந்துள்ளனர்.

எட்வர்ட் வாழ்ந்த காலங்களில் மேற்குலகில் கால்நடைகளை மேய்க்கும் பொறுப்பு வீட்டு வேலைகளைச் செய்யும் தாதிகளையே சார்ந்தது. அதிலும் பசுவை மேய்ப்பதும் பால் கறப்பதும் இந்த தாதிகளின் கடமை. அப்படிப்பட்ட தாதி ஒருவர் எட்வர்டிடம் கொளுத்திப் போட்ட ஒரு பேச்சுதான் அவரை தடுப்பூசிகளின் தந்தையாக மாற்றியது. இந்தக் காலத்தில் பசுவில் இருந்து ஒருவகை அம்மை நோய் மக்களைப் பீடித்திருக்கிறது. இது பெரியம்மை மாதிரி கொடுமையான நோயோ அல்லது உயிரைக் காவு வாங்கும் நோயோ அல்ல.

ஆனால், பெரியம்மை மாதிரியே நீர்க் கொப்புளங்களை உண்டாக்கும். இந்த நோயை பசு அம்மை (Cowpox) என அப்போது அழைத்திருக்கிறார்கள். அந்தத் தாதி, ‘தனக்கு பசு அம்மை ஏற்பட்டதால்தான் பெரிய அம்மை ஏற்படவில்லை’ என்று எட்வர்டிடம் சொல்ல... அவருக்குள் பளிச் என்று பல்பு எரிந்திருக்கிறது. தன் 13 வயதான மகன் மேல் இந்த பசு அம்மையை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைச் செலுத்தியிருக்கிறார்.

பையன் மிகவும் ஆபத்தான நிலைக்குச் செல்ல, பதறிப்போன எட்வர்ட் உடனே பெரியம்மை நோய்க் கிருமிகளை அடுத்ததாகச் செலுத்தியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக மகன் பெரியம்மையால் தாக்கப்படவில்லை. இதை வைத்து எட்வர்ட் பெரியம்மை நோய்க் கிருமிகளை வைத்து அதே நோயை குணப்படுத்தியதாக உலகம் நம்பியது. அவரை தடுப்பூசியின் தந்தையாக நினைத்தது; நினைக்கிறது.

உண்மையில், எட்வர்டின் மகன் பிழைத்தது அவனுக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட தீவிரம் குறைந்த பசு அம்மை நோய்க் கிருமிகளால்தான். தடுப்பு மருந்தின் தத்துவமே முள்ளை முள்ளால் எடுப்பதுதான். அதன்படி, பெரியம்மையை உண்டாக்கும் கிருமிகளில் இருந்துதான் பெரியம்மையை குணப்படுத்த முடியும்; குணப்படுத்த வேண்டும். எட்வர்டின் கண்டுபிடிப்பு நிகழ்ந்த காலத்திலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த ஒல்வெல் என்னும் மருத்துவர் இந்தியாவின் வங்காளப் பகுதிக்கு வந்து, சுமார் 20 வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார்.

இந்திய பவுத்தர்கள் கண்டுபிடித்த பெரியம்மைக்கான சிகிச்சை முறையை ஆராய்ந்து 1767களில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்ப்பித்திருக்கிறார். அதில், ஒரு வருடத்துக்கு முன்பு தாக்கிய பெரியம்மைக்கான நோய்க் கிருமிகளைப் பைகளில் சேமித்து வைத்து, அந்தக் கிருமிகளின் தீவிரம் குறைந்த பிறகு, அம்மை நோய் ஏற்பட்டவர்களை மீட்கவும், ஏற்படாமல் தடுக்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டதைப் பதிவுசெய்திருக்கிறார்.                         

தடுப்பூசிக்கான திட்டங்களை நிர்ணயிப்பவர்!

கேவி (gavi) என்ற சர்வதேச அமைப்புதான் வளரும் நாடுகளில் தடுப்பூசிக்கான திட்டங்களை நிர்ணயிக்கிறது. ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் சராசரியாக வருடத்துக்கு ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த நாடு இந்த அமைப்பில் உறுப்பினராகலாம். இதில் இந்தியா உட்பட 72 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

வளர்ந்த நாடுகள், சர்வதேச அளவிலான பெரிய அமைப்புகள், நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் தரும் பெரிய தொகையை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, இந்த அமைப்பு அதை தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் தேவைப்படும் வளரும் நாடுகளுக்குத் தருகிறது. இந்த அமைப்பிடம் தொகையைப் பெற்றுத்தான் நம் நாட்டில் தடுப்பூசித் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். வெளிநாடுகளில் நிராகரிக்கப்பட்ட மருந்துகளைத்தான் இந்த அமைப்பு நம் நாட்டில் பயன்படுத்த அறிவுறுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் சில மருத்துவர்களால் வைக்கப்படுகிறது.