குங்குமம் டாக்கீஸ்



* ‘‘நிறைய படங்கள் கமிட் ஆகி, அவை வெளிவராமல் போகும்போது சம்பளப் பிரச்னை என்றெல்லாம் நிற்கவேண்டாம் என நினைக்கறேன். இனிமேல் ஒரு படத்தில் கமிட் ஆனதும் அதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்’’ என சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் சிம்பு.

* 2019ல்தான் திருமணம் என தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறார் விக்னேஷ் சிவன். ‘பொண்ணு யாரு’ என எவரும் கேட்கமாட்டார்கள்தானே!

* தீபாவளிக்கு வரவிருந்த ‘சென்னை-28 பார்ட் 2’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘சைத்தான்’, ‘கத்தி சண்டை’ படங்களை நவம்பருக்கு தள்ளி வைத்து விட்டார்கள். நண்பன் கார்த்திக்காக விஷால் தன் படத்தைத் தள்ளி வைத்துவிட்டார். மற்றவர்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் இந்த முடிவு.

* ஷங்கரின் ‘2.0’ படத்தில் கிடைத்த பிரேக்கில் ஹெல்த் செக்கப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் ரஜினி. ‘2.0’வில் படகு சண்டை, பறவை ரோபோவுடன் ரஜினி ஃபைட் செய்யும் சீன்கள் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்கிறார்கள்.

* ‘‘நயன்தாராவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம், ‘ராஜா ராணி’தான்’’ என்கிறார் ஸ்ரீதிவ்யா.

* ‘‘நான் காமெடி ரோலில் அதிகம் நடிக்கறேன் என்ற குறையைப் போக்கும் படமாக மோகன்ராஜா சார் இயக்கும் படம் அமையும். அதில் நயன்தாரா காம்பினேஷன் நானே எதிர்பார்க்காத ஒன்று!’’ என ஆச்சரியமாகிறார் சிவகார்த்திகேயன்.

* ஆங்கில நாவல்கள், சிறுகதைகளை விரும்பி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. மார்க் பில்லிங்ஹாம் எழுதிய ‘டைம் ஆஃப் டெத்’, ஜெஃப்ரி ஆர்ச்சரின் ‘36 சிறுகதைகள்’ ஆகிய புத்தகங்கள் சமீபத்தில் படித்தவை லிஸ்ட்டில் அடங்கும்.

* தமன்னா ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி வாங்குகிறார். ஜோதிகிருஷ்ணா டைரக்‌ஷனில்  முதன்முதலில் நடித்தபோது அவரது சம்பளம் ஒரு லட்ச ரூபாய்தான்.

* ‘‘இந்த வருஷத்திலிருந்து நீ விரும்பினதெல்லாம் நடக்கும்’’ என பரிணீதி சோப்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

* சமீபத்தில் வடிவேலு, ஜி.வி.பிரகாஷ் இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் கடந்து மனமின்றி திரும்பியிருக்கிறார். ‘‘சார், அப்படியொரு சந்திப்பு’’ என ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார் ஜி.வி.பிரகாஷ்.

* கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் ‘ராஜகுமாரா’வில் நடித்து வருகிறார் ப்ரியா ஆனந்த். இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் சரத்குமார் நடிக்கிறார்.

* ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்தபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று பக்தியுடன் தரிசித்து வந்திருக்கிறார் ஸ்ரேயா.

* சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் ராய்லட்சுமி, இப்போது பாலிவுட்டில் நடித்து வரும் ‘ஜூலி 2’வுக்காக துபாய் பறந்திருக்கிறார்.

* ‘புலி முருகன்’ மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றவுடன் அதன் கதை  உரிமையைத் தமிழில் வாங்கிவிட்டார்கள். கமல், விஜய், விக்ரம், சூர்யா இவர்களில் ஒருவர்தான் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

* விஜய்சேதுபதியும், டி.ஆரும் சேர்ந்து நடிக்கப் போக, இருவரும் நண்பர்களாகிவிட்டார்கள். விஜய்சேதுபதி  ‘ஒரு தலைராகம்’ பாடல்களை பாடிக் காட்ட அசந்துவிட்டார் டி.ஆர்.