மணவாள மாமுனிகள் அருளிய தேவராஜ மங்களம்



காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதியை இங்கே வழங்குகிறோம்:   

மங்களம் வேதஸோ வேதிமேதினீக்ருஹமேதினே
வரதாய தயாதாம்னே தீரோதாராய மங்களம்

பிரம்மாவின் வேள்விச்சாலையை இருப்பிடமாய்க் கொண்டவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், வீரம், வள்ளல் தன்மை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

வாஜிமேதே வபாஹோமே தாதுருத்தரவேதித:
உதிதாய ஹுதாதக்நே: உதாராங்காய
மங்களம்

பிரம்மாவின் அஸ்வமேத வேள்வியில் ஹோமம் செய்தவுடன், ஹோம அக்னியில் இருந்து
உதித்தவரும், அழகான திருமேனியை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

யஜமானம் விதிம் வீக்ஷ்ய ஸ்மயமானமுகச்ரியே
  தயமானத்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம்

 தன்னைக் காண விழைந்த பிரம்மாவை
 நோக்கிக் கருணையோடு புன்முறுவல் செய்தபடி தோன்றிய வரதராஜப் பெருமாளுக்குப்
பல்லாண்டு.

வாரிதச்யாமவபுஷே விராஜத்பீதவாஸஸே
  வாரணாசலவாஸாய வாரிஜாக்ஷாய மங்களம்

கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், அத்திகிரி மலைமேல் திகழ்பவரும், தாமரைக் கண்ணருமான வரதராஜப்
பெருமாளுக்குப் பல்லாண்டு.

அத்யாபி ஸர்வபூதானாம் அபீஷ்டபலதாயினே
ப்ரணதார்த்திஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்

அனைத்துயிர்களுக்கும் விரும்பிய
வரங்களைத் தருபவரும், தன்னைச் சரணடைந்தோரின் துயரங்களைப் போக்குபவரும், நமக்குத் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

திவ்யாவயவ-ஸௌந்தர்ய-திவ்யாபரண-ஹேதவே
தந்தாவலீகிரீசாய தேவராஜாய மங்களம்

அழகிய அங்கங்களும், திவ்விய ஆயுதங்களும் கொண்டவராய் அத்திகிரி மேல் திகழும் வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

புருஷாய புராணாய புண்யகோடி-நிவாஸினே
  புஷ்பிதோதார-கல்பத்ருகமநீயாய மங்களம்

மிகத் தொன்மையானவரும், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியிருப்பவரும், கற்பக மரம் போன்றவருமான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

காஞ்சனாசலச்ருங்காக்ர-காலமேகாநுஸாரிணே
ஸுபர்ணாஸாவதம்ஸாய ஸுரராஜாய மங்களம்

பொன்மலையின் உச்சியில் கார்மேகம் விளங்குவது போல் கருட சேவையில் காட்சிதரும்
வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

போகாபவர்கயோரேகம் வாஞ்சத்ப்யோ தததே த்வயம்
மத்வரதராஜாய மஹோதாராய மங்களம்

இம்மை, மறுமை ஆகிய இரண்டுக்குமுரிய வரங்களை அடியார்களுக்கு அள்ளித் தரும் கருணைமிக்க வரதராஜப் பெருமாளுக்குப்
பல்லாண்டு.

மதங்கஜாத்ரி-துங்காக்ர-ச்ருங்கச்ருங்கார-வர்ஷ்மணே
மஹாக்ருபாய மத்ரக்ஷா-தீக்ஷிதாயாஸ்து மங்களம்

அத்திகிரி மலை உச்சிக்கு ஆபரணமாய்த் திகழ்பவரும், அடியார்களைக் காப்பதில் உறுதியாய் நிற்பவரும், கருணை மிக்கவருமான
வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

காஞ்சீபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷிணே
 அதீதார்ச்சா-வ்யவஸ்த்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்

அர்ச்சாவதார நிலையை மீறித் தன் கருணையால் திருக்கச்சி நம்பிகளிடம் உரையாடிய
வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.
அஸ்து ஸ்தனகஸ்தூரீ-வாஸனா-வாஸிதோரஸே

ஹஸ்திகிரநாதாய தேவராஜாய மங்களம்
திருமகளின் திருமார்பிலுள்ள சந்தனம், குங்குமத்தின் நறுமணம் கமழும் திருமார்பை உடையவரான வரதராஜப் பெருமாளுக்குப் பல்லாண்டு.

மங்களாசாஸனபரை : மதாசார்யபுரோகமை:
ஸர்வைச்ச பூர்வை : ஆசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம்.

இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட நமது குருமார்களால் போற்றப்பட்ட பெருமாளுக்குப் பல்லாண்டு.