வளம் தரும் வாஸ்து



குழந்தை வளர்தலுக்கும் வாஸ்துவுக்கும் என்ன சம்பந்தம்?

குழந்தைபேறு கண்ட குடும்பம், குழந்தையை மேலும் சீராட்டி பாராட்டி வளர்க்கும் முறைகள் பொதுவாக நமக்குத் தெரிந்தவைதான்.
ஏழு மாதங்கள் வரை குழந்தை தாய்ப்பால், புட்டிப்பாலை கொண்டே வளர்கிறது. எனவே பால் எளிதில் ஜீரணமாக செய்ய வேண்டிய  முறைகள் பல உள்ளன.

குழந்தை பிறந்தபின் உடனே சுத்தம் செய்யப்பட்டு, தொப்புள் கொடி கட்டி பாதுகாக்கப்படும். நிறைய குழந்தைகள் சளி காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை உருவாகும்.எனவே இக்கிருமிகளை போக்கக்கூடிய வேப்பிலை  (பெங்சூயியில் மரம்), கறிவேப்பிலை  குச்சி (ஈர்க்கு) ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அதனை சாம்பிராணி புகை போல போட்டு வந்தால் தாய் சேய் இருவருக்கும் சளி  பிரச்னை மட்டுமின்றி எளிதில் தொற்றும் வியாதிகள் வராது விரட்டி அடிக்கச் செய்யும்.குழந்தை பிறந்தவுடன் தங்க நகையில் தேன் தொட்டு  குழந்தை வாயில் ஊட்டுகிறோம். இது ஒரு நாள் மட்டும் செய்யக் கூடியதல்ல. பாலுடன் குறைந்த அளவு தேன் சேர்க்கும் போது அது  எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் பிற நோய்களை எதிர்க்கும் சக்தியாகவும் விளங்குவதாக அறிந்திருந்தனர். பெங்சூயியில் தேன் அமிர்தமாக  கருதப்பட்டு புகழப்படுகிறது.

வாஸ்து விஞ்ஞானத்திலும் கோயில் விமானங்களில் (கோபுரங்கள்) தேன் நிறைந்த மூங்கிலை நிறுவியுள்ளதை வெகு பாதுகாப்பானதாக  கூறப்படுகிறது. தேன் எத்தனை வருடம் ஆனாலும் அதன் தன்மை மாறாமல் உருமாறாமல் உள்ள பொருளாகவும் மின்னல் போன்றவற்றினால்  வரும் அபாயத்தை தாங்கும் சக்தியாகவும் இருப்பதால் இப்படி கோபுர உச்சியில் பொருத்துகிறார்கள்.பெங்சூயியின் உணவு முறைகளையும்  அது குறிப்பிடும் தன்மைகளையும் காண்போம்.வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது உலகெங்கும் ஒரே மாதிரியாகதான் உள்ளது. இதில் எங்கும்  வேறுபாடு இல்லை. அந்தந்த நாளில் அந்தந்த கிரகங்களின் ஆதிக்கம் உள்ளதை கிழமைகள் குறிக்கின்றன.வர்ணங்களை பற்றியும் வாஸ்து,  பெங்சூயியில் பெரிதும் சிலாகித்து விரிவாக அலசப்படுகிறது. இவை தனி மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகின்றன.பிறந்த தேதிக்கு ஏற்ற வர்ணங்கள் பயன்படுத்துவதைப் போல தாயும் சேயும் பிறந்த கிழமைக்கு ஏற்ற உணவை உண்ணும்போது மிக  சிறப்பான வளர்ச்சியுற்று (குழந்தை விரும்புவதும் அதுவே) நோய் நொடியின்றி வாழ சிறப்பாகும்.மேற்கண்ட உணவுகளை தாயும் சேயும் தினசரி உண்டுவர மிக சிறப்பாகும்.

ரத்தினங்களை அணிய முடியாத நிலையுள்ளவர்கள் இந்த ரத்தினங்களை இரவில் நீரில் போட்டு வைத்து மறுநாள் அந்த தண்ணீரை  அருந்தலாம் என்று நம் வாஸ்து விஞ்ஞானம் கூறுகிறது.  மேலும் குழந்தை பிறந்த நாளைக் கொண்டு அந்தந்த கிரகங்களை வானில்  தரிசிப்பதும், கீழ்க்கண்டவாறு உரிய தெய்வங்களை வழிபாடு செய்வதும் மிக சிறப்பான பலனை அளிக்க வல்லதாகும்.நவம்பர் மாதம் முதல்  மார்ச் முடிய இந்தியாவில் பனிக்காலம் ஆகும். பெரும்பாலான குழந்தைகள் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் அவதியுறுகின்றன. இதற்கு  பரிகாரமாக ‘‘வெள்ளை கம்பளி”யை படுக்கையாக உபயோகிக்கும்போது, குறிப்பிட்ட சுற்றளவில் கதகதப்பாக இருக்கும். (வடநாட்டில்  பெரியவர்களே இவ்விதம் பயன்படுத்துவதைக் காணலாம்).

அப்போது மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று ஏற்படாமல் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். எனவே ஆரோக்கியமும்  மேம்படும்.இப்படியாக குழந்தை பிராயத்தை நன்கு பேணி வளர்க்கும் போது உடல் ஆரோக்கியம், திடகாத்திரம், தைரியம் ஆகியவற்றை  குழந்தைப் பருவத்திலேயே பெற்று வருங்காலத்தில் வைரம் பாய்ந்த உடலை குழந்தை அடைய முடியும்.  குழந்தை பிராயத்தில் எலும்பு  வளர்ச்சி நன்றாக இருந்தால் மட்டுமே குழந்தையால் ஒரு வருடத்திற்குள் எழுந்து நடக்க எத்தனிக்கும். இதற்கு சூரிய ஒளியும், கால்சிய  சத்தும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே குழந்தையை சூரிய ஒளியில் சற்றுநேரம் காட்டியும், கிழக்கு/மேற்கு ஜன்னல் ஒட்டிய பகுதியில்  தொட்டிலை / கட்டிலை அமைத்தும் எலும்பு வளர்ச்சியை சீராக்கலாம்.இக்காலங்களில் கால்சியம் உள்ள உணவுகளை தாயும் எடுத்து,  தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு உணவாக செல்லவும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கால கட்டத்தில் தாயின் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்க வேண்டும். இதற்கு இயற்கையான அசோக மர பொருட்களை பயன்படுத்த  வேண்டும் (Botonical Name: Saraca Indica)  மேலும் இரும்பு சத்து சம்பந்தப்பட்ட பழ வகைகளை எடுத்துக் கொள்ளவும். குழந்தை  சாப்பிட்ட நேரம் போக எதையாவது பார்த்துக் கொண்டே இருக்கும்.இதற்கு கிரஸ்டல் என்ற பளிங்கு கல்லை அறையில் பயன்படுத்தியும்  சிம் என்று கூறப்படும் காற்றில் அசைந்தாடும் ஒலி எழுப்பக்கூடிய சாதனங்களை தொட்டில்/கட்டில் மீது கட்டி வைத்தால் குழந்தையின்  ஈர்ப்பு சக்தி கவனத்தை சிறப்பாக மாற்றும் ஆற்றல் உள்ளதாக பெங்சூயி தெரிவிக்கிறது. வாஸ்து, கட்டிடத்திற்கு மட்டுமின்றி தனிமனித  மேம்பாடு குறித்தும் சிறப்புற விளிக்கிறது.ஏழாம் மாதம் முதல் 11 மாதத்திற்குள் குழந்தைக்கு காதணி கட்டாயப்படுத்துகிறது. காரணம் காதின்  கீழ் பகுதியில் உள்ள நரம்பு அதன் சக்தி யாற்றலை பெரிதும் தூண்டுவதாக உள்ளது என்று வாஸ்து தெரிவிக்கிறது.  கர்ப்பகால குழந்தையின்  தலைமுடியும் ஒரு வகையில் மழிக்க வேண்டியதாகிறது என்றும் தெளிவாக்குகிறது.எனவே ஒரு வருடத்திற்கு உள்ளாக தலைமுடியை  முழுவதும் மழிப்பதால் அறிவுத்திறன் வளர்வது மட்டுமின்றி நல்ல ஆரோக்கியமும் அடங்கியிருப்பதாக வாஸ்து விவரிக்கிறது.

இது அனைத்து மதம் / நாடு / இனங்களிலும் கடைபிடிக்கப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவம் அறிய வருகிறது.சிறு சிறு விலங்கு,  பறவை படங்களை மற்றும் பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுத்து விளையாடச் சொல்ல, குழந்தை பய உணர்ச்சியிலிருந்து விடுபட  முடியும் என்கிறது பெங்சூயி. மயில், முயல், குதிரை, யானை, தவளை, ஆமை, நாய், பூனை, குருவி போன்ற பொம்மைகளையோ,  படங்களையோ குழந்தை பயன்படுத்தக் கொடுக்கலாம்.

(தொடரும்)