பகலிலேயே பந்தி!



சரோஜாதேவி பதில்கள்

* வலைவீசுவதில் யார் கெட்டி?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
வீசுவதில் பெண்ணும், மாட்டுவதில் ஆணும் கில்லாடிகள்.

*கண்டதும் காதல் சாத்தியமா?
- வண்ணை கணேசன்,
பொன்னியம்மன்மேடு.
எதைக் கண்டதும் என்பதைப் பொறுத்தது.

* முதலிரவுக்கு ஏன் சாந்திமுகூர்த்தம் என்று பெயர்?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
சாந்தி என்றால் அமைதி. முகூர்த்தம் என்றால் நேரம். அதுநாள் வரை துடித்துக் கொண்டிருந்த பல சமாச்சாரங்கள் அமைதி கொள்ளும் நேரம் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

* திருமணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிடுகிறதே?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.
அதற்கு முன் இருப்பதாக நீங்கள் கருதுவதும்கூட பெரும்பாலும் மூடநம்பிக்கைதான்.

* இரவே இல்லாமல் போயிருந்தால்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பகலிலேயே பந்தி போட்டுவிட வேண்டியது தான்.