பகலிலேயே பந்தி!
சரோஜாதேவி பதில்கள்
* வலைவீசுவதில் யார் கெட்டி? - கே.நடராஜன், திருவண்ணாமலை. வீசுவதில் பெண்ணும், மாட்டுவதில் ஆணும் கில்லாடிகள்.
*கண்டதும் காதல் சாத்தியமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. எதைக் கண்டதும் என்பதைப் பொறுத்தது.
* முதலிரவுக்கு ஏன் சாந்திமுகூர்த்தம் என்று பெயர்? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். சாந்தி என்றால் அமைதி. முகூர்த்தம் என்றால் நேரம். அதுநாள் வரை துடித்துக் கொண்டிருந்த பல சமாச்சாரங்கள் அமைதி கொள்ளும் நேரம் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.
* திருமணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிடுகிறதே? - சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர். அதற்கு முன் இருப்பதாக நீங்கள் கருதுவதும்கூட பெரும்பாலும் மூடநம்பிக்கைதான்.
* இரவே இல்லாமல் போயிருந்தால்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பகலிலேயே பந்தி போட்டுவிட வேண்டியது தான்.
|