ஆசை மரம்!



சரோஜாதேவி பதில்கள்

* மனைவியின் மகத்துவம் தெரிவது எப்போது?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
பிரசவத்துக்கு அவர் அம்மா வீட்டுக்கு போயிருக்கும்போது.

* சென்ட் போடும் பழக்கமுண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
போடும் பழக்கமுண்டு.

* ஜாக்கெட்டை கச்சை என்று சொல்வது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இச்சை ஊட்டுவதால் இருக்குமோ?

* காதலிக்க என்ன தகுதி வேணும்?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
விறைப்பா நிக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் இல்லையா?

* ஆசிரமத்தில்தான் அதெல்லாம் அதிகமா நடக்குதாமே?
- கே.கே.பி.மணியன், குனியமுத்தூர்.
ஆசிரமம் அல்ல. அதெல்லாம் ஆசைமரம் சார்.