கதவெல்லாம் ‘மூடு’ன பிறகு...
சரோஜாதேவி பதில்கள்
* உங்களை காதல் பினாமி, காம சுனாமி என்று அழைக்கலாமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. எதையாவது காமி என்று கேட்காத வரைக்கும் சரி சாமி.
* நிறைநெஞ்சம் பிளஸ் பாயிண்ட்டா? - கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர். பார்க்குறவங்களுக்கு பப்பரப்பான்னுதான் இருக்கும். சுமக்குறவங்களுக்குத்தான் சுமை தெரியும்.
* அந்த உணர்வுக்கு ‘மூடு’ என்று ஏன் பெயர் வைத்தார்கள்? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. இரவில் கதவெல்லாம் ‘மூடு’ன பிறகு வருகிற உணவு என்பதாலோ என்னவோ....
* மது, சிகரெட் பழக்கம் பெண்களுக்கும் அதிகரிக்கிறதே? - த.சத்தியநாராயணன், அயன்புரம். இதெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே பட்டா போடப்பட்ட போதைகளா? தீயபழக்கங்கள் என்பது ஆண், பெண் இருபாலருமே தவிர்க்க வேண்டியதுதான்.
*ஆண்கள் சப்பாத்தி சுடலாமா? - கே.நடராஜன், திருவண்ணாமலை. உங்க குசும்பு புரியுது. இப்போதெல்லாம் ரெடிமேடு சப்பாத்தி கடைகளில் கிடைக்கிறது. அப்படியே சுட்டு சாப்பிடலாம். மாவெல்லாம் பிசையத் தேவையில்லை.
|