எல்லாம் சலித்த பிறகு...
சரோஜாதேவி பதில்கள்
* மீன் குழம்பு, கோழி குழம்பு; எது கிக்கு? - ப.முரளி, சேலம். ஊட்டுவது யாரென்பதைப் பொறுத்தது. மச்சினிச்சி ஊட்டினால் அமோகம்தான்.
* பெண்கள் ‘குட் நைட்’ சொல்வது ஏன்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். நைட்ஷிஃப்ட்டை ஒழுங்காப் பாரு என்று எச்சரிப்பதற்காக இருக்குமோ?
* காமத்தின் நிறம் என்ன? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) விளக்கை அணைச்சபிறகு நிறமெல்லாம் ஒரு மேட்டரா சார்?
* ஒரு பெண் சாமியார் ஆவது எப்போது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ‘எல்லாம்’ சலித்தபிறகு சாமியார் ஆவதே ஆன்மீகத்துக்கு நல்லது.
* சரோஜாதேவி என்கிற பெயரில் எழுதுவது ஆண் என்கிற குற்றச்சாட்டுக்கு உங்க பதில்? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. அய்யோடா. இப்படியெல்லாம் மிரட்டி கேட்டா ‘தரிசனம்’ கொடுத்துடுவோமா?
|