வள்ளல் மனம் கொண்ட தல!



* ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பில் தனக்குக் கார் ஓட்டிய டிரைவரின் ஓட்டை உடைசலான செல்போனைப் பார்த்த அஜீத், திடீரென்று ஒரு ஷாப் அருகே காரை நிறுத்தச் சொன்னார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லை.

உடனே ஒரு கவரைக் கொடுத்து, அதிலுள்ள பணத்தில் புது செல்போன் வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார். யாருக்கோ அதை கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு வாங்கி வந்த டிரைவரின் கையிலேயே அந்தப் போனைக் கொடுத்த அஜீத், ‘பழசான பொருள் எதற்கு? புதுசா பயன்படுத்துங்க’ என்று சொல்லி உள்ளம் நெகிழச் செய்துவிட்டார்.

* சமீபத்தில் தன் பங்களாவுக்கு ‘பெஸ்ட் கன்ட்ரோல்’ செய்ய வந்த தொழிலாளர்களுக்கு காபி போட்டுக் கொடுத்து, அவர்களுடைய குடும்பத்தினரைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் நலம் விசாரித்ததுடன், அப்போதைய பண்டிகையை ஞாபகப்படுத்தி, பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அசத்தி இருக்கிறார் அஜீத்.

- தேவராஜ்