அரசியலுக்கு வருவாரா?




* சோழா பொன்னுரங்கம் தயாரித்த ‘அமராவதி’ படத்தில் அறிமுகமான அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளம், 5 ஆயிரம் ரூபாய். இன்று 20 கோடி ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்.

* உமர்முக்தார் சொன்ன, ‘என் வாழ்க்கையில் இனிமேல் நேற்று என்பது இல்லை. கண் திறந்தால் ஜனனம். கண் மூடினால் மரணம்’ என்ற வரிகள், அஜீத்தின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

* திருப்பதிக்கு நடந்து சென்று வெங்கடாசலபதியைத் தரிசித் திருக்கிறார். தனி வரிசையில் நிற்காமல், பொதுமக்கள் எப்படி காத்திருந்து தரிசனம் செய்கிறார்களோ அதையேதான் செய்வார். தேர்தலில் வாக்களிக்கும்போது, விசேஷ அனுமதி கேட்க மாட்டார். மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பார்.

* அரசியலில் குண்டூசி அளவுகூட அஜீத்துக்கு ஆர்வம் கிடையாது. தன் மனதுக்குச் சரியென்று பட்டதை அப்படியே சொல்லிவிடும் குணம், அரசியலுக்கு வந்தால் தாங்காது என்று நம்புகிறார். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லி வருகிறார்.

- தேவராஜ்