அஞ்சும் மூணும் எட்டு!



ரன்பீர் கபூரோடு பெட்ரூம் காட்சிகளில் நெருக்கமாக நடித்ததால் ஐஸ்வர்யா ராயை கடிந்து கொண்டார் அவரது மாமியார் ஜெயாபச்சன். இந்த மாமியார் - மருமகள் மோதலில் மாமனாரான அமிதாப், மருமகளுக்கே சப்போர்ட் செய்திருக்கிறார். இதனால் அமிதாப்புக்கும், ஜெயாபச்சனுக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து தனித்தனி வீடுகளில் வசிக்கிறார்களாம்.

எடை குறைத்தும்கூட பாலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாமல் பரிணீதி சோப்ரா பீர் பார்ட்டியே கதி என்று இருக்கிறாராம். அவருக்கு ஹாலிவுட் சீரியல்களிலாவது வாய்ப்பு வாங்கிக் கொடுக்கக்கூடாதா என்று அவரது நெருங்கிய சொந்தமான பிரியங்காவிடம் கேட்கிறார்களாம் உறவினர்கள்.சஞ்சய்தத் வாழ்க்கைக் கதையில் ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

இதில் மூன்று ஹீரோயின்கள். ஒரு வேடத்தில் சோனம்கபூர் நடிப்பதாக இருந்தது. அவர் வேண்டாமென்று சொல்லிவிட்டாராம் ரன்பீர். முன்பொருமுறை ‘எப்போதும் ஆணுறையுடன் சுற்றுபவர்’ என்று இவரைப்பற்றி தீபிகா சொன்னதை, சோனம் வழிமொழிந்த கோபம் இன்னமும் ரன்பீருக்கு தீரவில்லை போலிருக்கிறது.

லண்டனில் ‘ஜாலி  எல்.எல்.பி-2’ ஷூட்டிங் முடிந்தும்கூட கூடுதலாக ஒருவாரம் அக்‌ஷய்குமார் அங்கேயே தங்கியிருக்கிறார். படத்தின் ஹீரோயின் ஹூமாகுரேஷியும் லண்டனில் ஷாப்பிங்குக்காக ஒருவாரம் தங்கிவிட்டார் என்று இன்னொரு தகவல். அஞ்சும் மூணும் எட்டுதானே?

- ஜியா