ஊரடங்கில் சிக்கிய கேப்டன் மகன்!



விஜயகாந்தின் மகன் சண் முகப் பாண்டியன் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ போன்ற படங்களில் ஹீரோவாக கலக்கியவர். இப்போது ‘மித்ரன்’ என்கிற படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதற்காக கட்டான உடலமைப்பைப் பெறுவதற்காக நெதர்லாந்து நாட்டுக்குப்போய் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே ஊரடங்கில் சிக்கிக் கொண்ட நிலையில் கேப்டனின் மகனும் அங்கே மாட்டிக் கொண்டார். மேலும் இரண்டு ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சண்முகப் பாண்டியன் ஐரோப்பாவில் மாட்டிக் கொண்டதால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தான் நலமாக இருப்பதோடு, முறையாக உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வருவதாக சண்முகப் பாண்டியன் சொல்கிறார். பார்த்திபனின் மகன் ராக்கிக்கு ‘ஃபேஸ்டைம் போட்டோ ஷூட்’ என்கிற தொழில்நுட்ப அடிப்படையில் ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

- யுவா