நாட்டுக்கோழி குழம்பு



என்னென்ன தேவை?

நாட்டுக் கோழி -1/2 கிலோ ,
சின்ன வெங்காயம் - 2,
தக்காளி - 2,
இஞ்சி, பூண்டு விழுது 1 ஸ்பூன்,
க.எண்ணெய் – 100மிலி,
பட்டை, அன்னாசிப்பூ , கல்பாசி - , சோம்பு - சிறிதளவு,
 மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - , மல்லித்தூள் 1/2ஸ்பூன்- ,
சீரகம், சோம்புத்தூள் - சிறிது ,
தேங்காய் பால் - 1 கப்,
கறிவேப்பிலை, மல்லி, புதினா - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடான பிறகு எண்ணெய் ஊற்றி, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன்  வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து  நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி  சேர்த்து கறியை அதில் சேர்த்து வதக்கி பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். கறி வெந்தவுடன் மசாலாவை சேர்த்து கொதித்த பின்பு  தேங்காய் பால் ஊற்றி சிறிது கொதித்தவுடன் மல்லி, புதினா சேர்த்து இறக்கி விடவும்.