ஆத்தங்குடி இலை சுருட்டி மீன்



என்னென்ன தேவை?

முள் இல்லாத வறுத்த மீன் துண்டுகள் - 5 ,
பெரிய வெங்காயம் - 2,
நைசாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக  சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்த பின்பு தக்காளியை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  சோம்புத் தூள், சீரகத் தூள் போட்டுக் கிளறவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். கொதித்தபின்  திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும். வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி  தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும்.