எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!



வாசகர் பகுதி

*தொண்டை கரகரப்பு: சுக்கு, மல்லி, மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*தலைவலி: 5 அல்லது 6 துளசி இலைகளுடன் சிறு துண்டு சுக்கு, லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

*நெஞ்சு சளி: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆறவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

*தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

*வாய் நாற்றம்: ஒரு சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து இதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

*அஜீரணம்: ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*வாயுத் தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப் புண் நீங்கும்.

*வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.

*மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை தூள் செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

*தேமல்: வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் சருமத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*சர்க்கரை நோய்: வெந்தயத்தை அரைத்து தினந்தோறும் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.