மனத்தளர்ச்சி மருந்துகளின் விளைவுகள்!



உடல்மொழி ரகசியங்கள் 39

மனத்தளர்ச்சி நோய் சிகிச்சையில் பயன்படுத்தும் மருந்துகள், குறிப்பாக ‘புரோசாக்’, செல்களில் செரோடோனின்  நியூரோடிரான்ஸ்மிட்டர் சுரப்பை மேம்படுத்துவதன் மூலம் நோயைக் குறைப்பதாக மருத்துவர்கள் பல ஆண்டுகளாகக் கருதினர். ஆனால் இன்றைய ஆராய்ச்சி
களில், அதன் செயல்பாடு மாறியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.  

சில மனத்தளர்ச்சி எதிர்ப்பு மருந்துகள் மூளைச் செல்கள் புதிய டிஎன்ஏ உருவாக்கத்தை தூண்டிமேம்படுத்துகின்றன. மூளை செல்களுக்கிடையே டெண்ட்ரீட் இழை இணைப்புகளை மேம்படுவதால், மூளை செல்களுக்கு இடையே செய்தித் தொடர்பு அதிகரிக்கிறது. இத்தகைய மாற்றங்களை ‘நியூரோஜெனசீஸ்’ எனலாம். 

‘புரோசாக்’ மற்றும் வேறு மனத்தளர்ச்சி மருந்துகள் மற்றும் செயிண்ட் ஜான்ஸ்வோர்ட் (St. John’s Wort)  மூலிகையை சாப்பிட்ட உடனே, மூளையில் செரோடோனின் அளவு உயர்கிறது. இது மனத்தளர்ச்சியை வேகமாக குறைக்கிறது. ஆனால் முழுமையான பலனுக்கு, ஒரு மாதம் தேவை. 

அமெரிக்க தேசிய மனநல ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானி டாக்டர் ரெனேஹென், தனது உதவியாளர்களுடன் இந்த மனத்தளர்ச்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மனத்தளர்ச்சி செயல்பாடுகளை ஆராய்ந்துள்ளார். இம்மருந்துகள்  மூளையில் செல்கள் மற்றும் மூளை செல்களிடையே இணைப்பாக உள்ள இடைவெளி இணைப்பு  நரம்பிழைகளான புதிய ‘டெண்ட்ரீட்ஸ்’ எண்ணிக்கையை அதிகரிக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாகும்.

டாக்டர் ரெனே ஹென் மற்றும் வேறு பல ஆராய்ச்சியாளர்கள் - மனத்தளர்ச்சி எதிர்ப்பு மருந்துகள் ‘நியூரோஜெனசிஸ்’ செய்முறையை மேம்படுத்துவதைக் கண்டுபிடித்துள்ளனர். இச்செய்முறையால் மூளை செல்களை உருவாக்கும். புதிய டிஎன்ஏ உருவாக்கப்படுகிறது.

மேலும் மூளை செல்களின் இடைவெளி இணைப்புக்கு புதிய ‘டெண்ட்ரீட்ஸ்’  நரம்பிழைகளும் உருவாக்கப்படுகின்றன. டாக்டர் ரெனே ஹென், ‘நியூரோஜெனசீஸ்’ செயல்பாடுகளை அடையாளப்படுத்தும் முக்கியமான வேதிப்பொருளை மனத்தளர்ச்சி எதிர்ப்பு மருந்துகள் 60% உயர்த்துவதையும் கண்டுபிடித்துள்ளார். 

மன அழுத்தத்தால் ‘அட்ரினலின்’ மற்றும் ‘குளுகோகார்டி காய்டு’  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் மிக விரைவில், குறிப்பிட்ட மரபணுக்களின் செயல்பாடுகளை நிறுத்திவிடுகின்றன உணவு செரிப்பு, உடல் வளர்ச்சி, நோய் குணமாவது, இனப்பெருக்கம் ஆகிய இன்றியமையாத செய்முறையிலுள்ள மரபணுக்கள் இவை. 

அதே வேளை, இந்த ஹார்மோன்கள் நன்மையும் செய்கின்றன. ஆபத்து சூழலில் தப்பிப் பிழைக்கும்படி மரபியல் செயல்பாடுகளை மேம்படுத்தி, உடலின் மொத்த உயிர் வேதியல் ஆற்றலை இதயம் மற்றும் எலும்பு மண்டலத் தசைகளில் சேர்க்கிறது. அபாய சூழல்களில் நாம் உயிர்பிழைத்திருப்பது இதனால்தான். இந்த மன அழுத்த அளவு குறைந்த நேரம் மட்டுமே நீடிக்க வேண்டும். மாறாக தொடர்ந்து நீடித்தால், அது நோய். 

மன அழுத்தத்தால் உருவாகும் அழற்சி குறித்த நோய்கள் விரைவில் குணமாகாது. உயர் ரத்த அழுத்த நோய் உருவாகி, இயல்பான ரத்தவோட்டம் குறையும். இதயத்தமனி நோய் உருவாக்கும்  மூளை செல்கள் வேகமாக முதிர்ச்சியடையும். புதிய டிஎன்ஏ உருவாக்கப் பணிகள் முடக்கப்பட்டு, நினைவாற்றல் சீர்கெடும். உடலில் உயிர் வேதியல் மாற்றங்களால் மனத்தளர்ச்சி  மற்றும் மனப்பதற்றம் உள்ளிட்ட பாதிப்புகள்
உருவாகும்.

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்