ஊருக்குள் வந்த காண்டாமிருகம்!



யானைகள் ஊருக்குள் புகுந்து களேபரம் செய்வது பழைய செய்தி. இப்போது காண்டாமிருகம் புது செய்தி. நேபாளத்தின் பர்ஸா வனவிலங்கு பூங்காவிலிருந்து தடம் மாறி ஊருக்குள் வந்த காண்டாமிருகம், குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் ஓடி, மக்களை மிரட்டி, வாகனங்களைத் துரத்தி நிகழ்த்திய களேபரங்களில் ஒருவர் இறந்துவிட்டார்; ஆறு பேர் காயமடைந்தனர். எப்போதும் இப்படி ஆனதில்லை என்பதால் எல்லோருக்கும் அதிர்ச்சி!