கவிதைக்காரர்கள் வீதி
*ஒப்பனை செய்துகொள்ளாமல் வீதியில் நடமாடும் மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
*எங்கோ எவரோ தயாராகிறார்கள் கல்லறையில் உறங்குவதற்கு
*எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் ஆகவே விரும்புகின்றன
*விளக்கினால் விரட்டப்பட்ட இருள் வானத்திடம் தஞ்சமடைந்தது
*எல்லா பாதைகளும் மயானத்துக்குத்தான் கொண்டுபோய் விடுகிறது
*இறக்கை வளர்ந்த பின்னும் பறக்க முயலவில்லை அந்தக் கூண்டுக்கிளி
*எத்தனை பிம்பங்கள் ஒளிந்திருக்கின்றன இந்த நிலைக்கண்ணாடியில்
*முங்கியவர்களின் பாவங்களையெல்லாம் எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் கங்கை?
*திரும்பி வந்த அலையிடம் கரையின் நலத்தைப் பற்றி விசாரித்தது கடல்
*மீறுவதற்காகவே வகுக்கப்படுகின்றன விதிமுறைகள்
ப.மதியழகன்
|