ஜோக்ஸ்



‘‘பொங்கலுக்கு வந்த தலைவர் நெய்யைக் கடத்திட்டார்...’’
‘‘நெய் மணல் மணலா இருந்திருக்கும்... அதான்!’’

‘‘கடைசியா தலைவர் வந்ததும்தான் பொங்கல் பானை பொங்குச்சு...’’
‘‘அநியாயத்தைக் கண்டதும் பொங்கிடுச்சுன்னு சொல்லு..!’’

‘‘தலைவரே... பொங்கல் பட்டிமன்றத்துக்கு ஒரு தலைப்பு சொல்லுங்க!’’
‘‘அதிகமாய் இனிப்பது சுகர்கேனா... தீபிகா படுகோனா..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் மேல அபாண்டமா பழி போட்டிருக்காங்களா... எப்படி?’’
‘‘கரும்பு குவிப்பு வழக்கு போட்டிருக்காங்களே..!’’

‘‘தலைவர் ஏன் உண்ணாவிரதத்தை நீட்டிக்கச் சொல்றார்?’’
‘‘தான் செய்த பொங்கலைக் கொடுத்து அவரோட உண்ணாவிரதத்தை முடிச்சு வைக்க அவர் மனைவி பிளான் பண்ணினது தெரிஞ்சு போச்சாம்!’’

‘‘ஆச்சரியமா இருக்கு... தலைவரோட பேச்சுக்கு எப்படி இன்னைக்கு இவ்வளவு கூட்டம்..?’’
‘‘பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு திரை விமர்சனம் சொல்றாராம்..!’’

‘‘தலைவர் மேல சுற்றுச்சூழல் பாதிப்பு வழக்கு போட்டிருக்காங்களா... ஏன்?’’
‘‘போகிக்கு அவரோட பழைய குற்றப்பத்திரிகைகளை எரிச்சாராம்!’’
 பெ.பாண்டியன்,கீழசிவல்பட்டி.