மழைத்தும்பிகள்
 *இது காலம் பிழிந்து மரணம் குடித்தல் *தேடக் கிடைக்கும் பாறைக்குள் கூழாங்கல் *வழியனுப்பிவிட்டு வந்து படுக்கையில் படுக்கையில் கிடைத்த உன் ஒற்றை முடியை எடுத்து மார்பில் படுக்க வைத்துத் தூங்க வைக்கிறேன் *ஒன்றன் மீது ஒன்றாய் விழுந்த ஆடைகளால் ஏற்பட்ட பேரிரைச்சலில் நேற்று இரவு முழுக்க எங்களால் தூங்கவே முடியவில்லை *இருவரும் விடிய விடிய நல்ல பிள்ளைகளாய்ப் பார்த்துக் கொண்டே படுத்திருக்க வேண்டும் என்றாய். உடனே எத்தனை பேர் கேட்கிறார்கள் பார் அப்படி இருந்தீர்களா என்று அறிவுமதி
|