‘‘தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘அவர் பேச்சைக் கேட்க வர்றவங்களுக்கு பொங்கல் இனாம் தரப்படும்னு சொல்லியும் மீட்டிங்குக்கு ஒருத்தரும் வரலையாம்!’’

‘‘போதையில இருந்த தலைவரைப் போய் பொங்கல் விழாவுக்கு கூப்பிடுவாங்களா..?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘பொங்கல் வைத்த பெண்களைப் பார்த்து... ‘உங்களால நுரை வராம பொங்கல் வைக்கத் தெரியாதா’ன்னு கேட்டுட்டார்!’’
‘‘உன் மனைவி வச்ச பொங்கலை வாயில வைக்க முடியலையா... இந்த விஷயத்துல நான் தப்பிச்சுட்டேன்!’’
‘‘எப்படி?’’
‘‘என் பொண்டாட்டி வச்ச பொங்கலை பானையில இருந்தே எடுக்க முடியலை!’’
.
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி
‘‘பொங்கலுக்கு ரிலீசாகிற நம்ம படம் குப்பைன்னு மக்களுக்கு தெரிஞ்சு போச்சா... எப்படிச் சொல்றே?’’
‘‘படப் பெட்டியை எரிச்சு போகி கொண்டாடறாங்களே!’’
‘‘பொங்கல் விழாவை ஆரம்பிச்சு வைக்கப் போன தலைவர் ஏன் சோகமா இருக்கார்?’’
‘‘செருப்பு வீசறதுக்கு பதிலா, எல்லாரும் கரும்பு தின்னுட்டு அவர் மேல சக்கையை எறிஞ்சுட்டாங்களாம்!’’
‘‘இது வில்லங்கமான ஜல்லிக்கட்டு மாடுன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘அதோட கொம்புல, தலைவருக்கு வந்த குற்றப் பத்திரிகையை கட்டி விட்டிருக்காங்களே..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘போர்க்களத்தில் நாலாப்புறமும் எதிரிப் படை வீரர்கள் சூழ்ந்து கொண்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் மன்னர் தலையைச் சொறிந்திருக்கிறார்...’’
‘‘அப்புறம்..?’’ ‘‘எதிரி மன்னன் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு பொங்கல் இனாம் கொடுத்து விட்டானாம்!’’