ஜோக்ஸ்



‘‘தலைவருக்கு பொது அறிவு போதாதுன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘திண்டுக்கல் லியோனியும், நடிகை சன்னி லியோனும் அண்ணன் தங்கச்சியான்னு கேட்குறார்!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘தலைவரே... இது கோர்ட்! இங்கே உங்களை விசாரணைக்காகத்தான் கூப்பிட்டிருக்காங்க. ஜட்ஜை புகழ்ந்து பேசக் கூப்பிடலை!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘வழக்கமா ஒண்ணு, ரெண்டு பாட்டுக்காகத்தானே ஃபாரீன் லொகேஷன் போவாங்க... நீங்க முக்கால்வாசிப் படத்தை அங்கேயே எடுக்கணும்ங்கறீங்களே?’’
‘‘இது முற்றிலும் மாறுபட்ட கதையாச்சே... வெளிநாட்டுல வளர்ற ஹீரோ, பாட்டுப் பாட மட்டும்தான் இந்தியா வர்றான்!’’
- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.

‘‘டாக்டர்... என்னை நம்பி மூணு குடும்பம் இருக்கு!’’
‘‘பார்த்தீங்களா... என் குடும்பத்தை விட்டுட்டீங்களே?’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

கைப்பந்தை கையால அடிப்பாங்க, மட்டைப் பந்தை மட்டையால அடிப்பாங்க. அப்ப கூடைப்பந்தை கூடையாலயா அடிப்பாங்க?
-மனைவி பின்னால் காய்கறிக் கூடையைத் தூக்கிக் கொண்டு திரிவோர் சங்கம்
-வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

என்னதான் பொம்பளை பாம்புன்னாலும், அதுவும் ‘சட்டை’யைத்தான் உரிக்குமே தவிர ‘சுடிதாரை’ உரிக்காது!
 எதையும் சட்டை பண்ணாமல் தத்துவம் சொல்வோர் சங்கம்
கா.பசும்பொன், மதுரை.

‘‘தலைவரே! எல்லா மருந்துக் கடையிலேயும் இப்ப செரிமான மாத்திரைதான் நிறைய விக்குது...’’
‘‘ஏன்யா?’’
‘‘நீங்க ஜெயிச்சதை ஜனங்களாலே ஜீரணிக்கவே முடியலையாம்..!’’
- தாமு, தஞ்சாவூர்.