ஜோக்ஸ்

தத்துவம் மச்சி தத்துவம்
ஃபேன் சுத்தினா காத்து வரும்; தலை சுத்தினா காத்து வருமா? - காற்று வாங்க கடற்கரைக்கு வருவோர் சங்கம் - பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘எதுக்கு கபாலி அந்த வீட்டுல திருடுறதுக்கு முன்னாடி ரிப்பன் கட் பண்ணினே..?’’ ‘‘அந்த ஏரியாவுல எனக்கு அதுதான் முதல் திருட்டு ஏட்டய்யா..!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய பெரிய ஆறுகளில் தண்ணீர் ஓடின சுவடு இருக்காம்...’’ ‘‘அங்கே மணலாவது இருக்கா... அள்ளிட்டாங்களா?’’ - என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.
‘‘தலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கமா அலையறாரே... ஏன்?’’ ‘‘நீதிபதி கேட்கற கேள்விகள் அவுட் ஆகுமான்னு பாக்கறார்...’’ - அம்பை தேவா, சென்னை.
நமக்கு வேண்டியவங்க இறந்து போனா அஞ்சலி போஸ்டர் ஒட்டலாம். ஆனா அதுல நடிகை அஞ்சலி படத்தையெல்லாம் போட முடியுமா? - சுடுகாட்டுத் தீயில் சுருட்டு பிடிப்போர் சங்கம் - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
‘‘ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?’’ ‘‘மூதேவி, காலங்காத்தால குடிச்சிட்டு பாட்டைப் பாரு... இது மஞ்சள் கலர் ரிப்பன்!’’ - சரவணன், கொளக்குடி.
|