இந்த வார ராசி பலன்கள்



மேஷம்

குடும்பத்தார் உங்க யோசனைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவா இருப்பாங்க. மனசில் பட்டதை பளிச்னு பேசி உறுதியான மனநிலையைக் காட்டுவீங்க. சேமிக்கற அளவுக்கு வருமானம் அதிகரிக்குமுங்க. டிசம்பர் 31ந் தேதி இரவு 9 மணி முதல் ஜனவரி 1, 2 தேதி வரை சந்திராஷ்டமம் நடக்குதுங்க. அதனால யாரையும் விமர்சிக்காதீங்க. சனி வலுவா இருக்கறதால தன்னம்பிக்கை துளிர்விடுமுங்க. முன்கோபம், டென்ஷன் விலகும். வியாபாரத்துல காலாவதியாகாத பழைய சரக்குகளை விற்பீங்க. உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவார். நவகிரக சந்நதியில் சர்ப்ப ப்ரீதி பண்ணுங்க; சகலமும் கைகூடும்.


ரிஷபம்
 
புதன் வலுவா இருக்கறதால எதிர்பார்த்த இடத்லேர்ந்து உதவி கிடைக்குமுங்க. பழைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை விலகி புதுத் தெம்பு பெறுவீங்க. பிள்ளைகளோட விருப்பங்களை நிறைவேற்றுவீங்க. சளித்தொந்தரவு, வயிற்றுவலியால கொஞ்சம் அவதிப்படுவீங்க. புதிய நண்பர்கள் அறிமுகமாவாங்க. அரசு காரியங்கள்ல அனுகூலமான போக்கு தெரியுதுங்க. வியாபாரத்துல பாக்கிகள் வசூலாகிடும். இரும்பு, புரோக்கரேஜ் வகைகள்ல ஆதாயம் உண்டுங்க. உத்யோகத்துல பணிகளை விரைந்து முடிப்பீங்க. முருகனை தரிசனம் பண்ணுங்க; புது சிறப்புகள் பெறுவீங்க.


மிதுனம்

மனசுக்குப் பிடிச்சவங்களை சந்திப்பீங்க. கணவன் மனைவிக்குள் பிரச்னை இல்லீங்க. தேவையான அளவு பணம் புரளும். சுக்கிரன் வலுவா இருக்கறதால மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காதுங்க. குழந்தைங்க உடல்நிலை சீராகிடும். மன உளைச்சல் விலகிடும். பழைய சொந்தங்கள் தேடி வருவாங்க. பயணங்கள் புது அனுபவங்களைத் தருமுங்க. வெளிவட்டார மதிப்பு கூடும். விரும்பிய பொருட்களை வாங்குவீங்க. வியாபாரத்துல சிக்கல் எதுவும் தெரியலீங்க. உத்யோகத்துல திறமையை நிரூபிப்பீங்க. வெள்ளிக் கிழமை விநாயகருக்கு அபிஷேகம் பண்ணுங்க. விக்னங்கள் எல்லாம் விலகும்.


கடகம்

சுக்கிரன் வலுவாக இருக்காருங்க. அதனால தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சில விஷயங்களை ஆதாயத்தோடு முடிப்பீங்க. பிள்ளைகளோட வருங்காலத்துக்கு திட்டம் தீட்டுவீங்க. சுப விசேஷங்கள், உறவினர், நண்பர் வருகை என்று வீடே கலகலப்பாக இருக்குமுங்க. தாயாருக்கு இருந்துவந்த மூட்டுவலி, முழங்கால்வலி எல்லாம் தகுந்த சிகிச்சையால நீங்கிடுமுங்க. வியாபாரத்துல புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவாங்க. உத்யோகத்துல மேலதிகாரி ஆதரவா இருப்பார். ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்னைன்னு கோளாறு வருமுங்க. புற்றுள்ள அம்மன் கோயில்ல வழிபடுங்க. அன்னை அருள் காக்கும்.


சிம்மம்

கேது சாதகமா இருக்காருங்க. அதனால புது எண்ணங்கள் தோணுமுங்க. கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்குமுங்க. எதிர்பார்த்த பணம், சரியான சமயத்துக்கு வந்து சேரும். பிரபலங்களின் சந்திப்பு நன்மை தருமுங்க. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்குமுங்க. வெளியூர் பயண வாய்ப்பு வந்தா தவிர்க்காதீங்க; அதனால ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்துல மதிப்பு அதிகரிக்கும். கால்வலி, மூட்டுவலின்னு கஷ்டப்படுவீங்க. வியாபாரத்துல புது உத்திகளைப் புகுத்துவீங்க. உத்யோகத்துல சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. இஷ்டப்பட்ட அம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடுங்க. பிரகாசிப்பீங்க.


கன்னி

நீங்களே ஆச்சரியப்படற மாதிரி உங்க வெளிப்படையான பேச்சு சில காரியங்களை சுமுகமா முடிச்சுத் தருமுங்க. இதுக்கு குரு வலுவாக இருக்கறதுதாங்க காரணம். குடும்பத்துல மகிழ்ச்சி நிலவுமுங்க. பிள்ளைகளோட உடல்நலம் சீராகி, நிம்மதி ஏற்படுமுங்க. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகுமுங்க. தந்தையாருக்காக மருத்துவச் செலவு ஏற்படுமுங்க. தைராய்டு பிரச்னையின் ஆரம்ப அறிகுறியின்போதே மருத்துவரைப் பார்த்திடுங்க. வியாபாரத்துல போட்டியாளர்கள் அடங்குவாங்க. உத்யோகத்துல பணிகள் தேங்காது. குலதெய்வத்தை பிரார்த்தனை செய்துக்கோங்க; வளம் பெருகும்.


துலாம்

புதன் வலுவா இருந்து, தடைபட்டுக் கொண்டேயிருந்த பணிகளை விரைவாக முடிக்க வைப்பாருங்க. மனதுக்கு இதமான செய்திகள் வருமுங்க. கணவன் மனைவிக்குள் எந்த சிக்கலும் தெரியலீங்க. பிள்ளைகள் சொல்லத் தயங்கற ஆசைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றி வைப்பீங்க. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாதுங்க. வீட்டை அழகுபடுத்துவீங்க. காய்ச்சல், ஒற்றைத் தலைவலின்னு உபாதை வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீங்க. உத்யோகத்துல நிலுவையில் இருக்கற சலுகைகள் கிடைக்குமுங்க. திருச்செந்தூர் முருகனை தியானம் பண்ணுங்க. பிரச்னை அலைகள் ஓயும்.


விருச்சிகம்

குரு சாதகமா இருக்காருங்க. அதனால எதிர்பார்த்திருந்தபடி உதவிகள் கிடைக்குமுங்க. குடும்பத்துல கலகலப்பான சூழல் உருவாகுமுங்க. பிள்ளைகளால பெருமையடைவீங்க. அரசாங்க அதிகாரிகளின் நட்பு ஆதாயம் தருமுங்க. கோயில் சீரமைப்புப் பணிகள்ல ஈடுபடுவீங்க. தாய்வழி சொந்தங்களால ஆதாயம் உண்டுங்க. மூச்சுப்பிடிப்பு, முழங்கால் வலின்னு கோளாறு வரும். வியாபாரத்துல பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. உத்யோகத்துல உயரதிகாரியோடு சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருமுங்க. ராகுகாலத்துல துர்க்கையை வழிபடுங்க. திருப்பங்கள் அமையும்.


தனுசு

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு காரியத்தை முடிச்சு, நற்பெயர் பெறுவீங்க. சுக்கிரன் வலுவா இருக்கறதால குடும்பத்துல எந்தச் சலனமும் இருக்காதுங்க. அரசாங்க விஷயங்கள்ல அனுகூலமான நிலை தெரியுதுங்க. பிள்ளைங்க குடும்ப நிலைமையை உத்தேசிச்சு பிடிவாதத்தைத் தளர்த்திப்பாங்க. வீட்டு பராமரிப்புச் செலவு அதிகமாயிடுமுங்க. வியாபாரத்துல போட்டிகளை சமாளிப்பீங்க. உத்யோகத்துல திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பீங்க. வலது கண் வலி, வாயுக்கோளாறால் தசைப் பிடிப்புன்னு உபாதை வரும். இஷ்டப்பட்ட மகானை வழிபட்டு அவர் நாமாவளி படிங்க. எல்லாம் தெளிவாகும்.


மகரம்

புதன் வலுவா இருக்காருங்க. அதனால மனசுக்கு இனிமையான செய்திகள் வருமுங்க. புது நண்பர்கள் அறிமுகம், பல எதிர்கால நன்மைகளைத் தருமுங்க. செலவுக்கேத்த வரவு இருக்கறதால குடும்பத்துல சலசலப்பு இருக்காதுங்க. 27ந் தேதி மதியம் 3 மணிவரை சந்திராஷ்டமம் நடக்குதுங்க; கவனமா இருங்க. மனைவியின் உடல்நிலை சீராகிடுமுங்க. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுங்க. வியாபாரத்துல சில அதிரடி மாற்றங்களைச் செய்வீங்க. உத்யோகத்துல எல்லோரும் சுமுகமா பழகுவங்க. மூச்சுப்பிடிப்பு, வயிற்றுவலின்னு வரும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு விளக்கேத்துங்க. பிரகாசமா வாழ்வீங்க.


கும்பம்

ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டியது அவசியமுங்க. குடும்பத்துல கல கலப்புக்குப் பஞ்சம் இருக்காதுங்க. பிள்ளைங்க தங்களோட சாதனைகளால உறவிலும், வெளிவட்டாரப் பழக்கத்திலும் பெருமை தேடித் தருவாங்க. காது, தொண்டை பகுதிகள்ல வலி ஏற்படுமுங்க. சூரியன் வலுவா இருக்கறதால சொந்த ஊர்ல மதிப்பும் மரியாதையும் கூடுமுங்க. 27ந் தேதி மதியம் 3 மணி முதல் 29ந் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடக்குதுங்க. அதனால முன்கோபம், வீண் அலைச்சல்னு வருமுங்க. வியாபாரத்துல மறைமுகப் போட்டிகளை வெல்வீங்க. உத்யோகத்துல உங்க கை ஓங்கும். துர்க்கை கவசம் படியுங்க. கலக்கம் மறையும்.


மீனம்

கனிவான பேச்சால காரியத்தை முடிக்க காலம் கனிந்திருக்குங்க. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி சந்தோஷப் படுத்துவீங்க. கவலை தந்துக்கிட்டிருந்த பிள்ளைகளோட உடல்நிலை சீராகிடும். சுக்கிரன் வலுவா இருக்கறதால, எதிர்பார்த்த இடத்திலேர்ந்து பணம் வரும். வயிற்றுவலி, கண் எரிச்சல்னு கோளாறு வருமுங்க. 29ந் தேதி மாலை 6 மணி முதல் 31ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் நடக்குதுங்க. வீண் அலைச்சல், டென்ஷனை தவிர்க்கப் பாருங்க. வியாபாரத்துல பழைய பாக்கிகள் சுலபமா வசூலாகிடும். உத்யோகத்துல எந்த சிக்கலும் தெரியலீங்க. பெருமாள் சந்நதியிலே விளக்கேற்றுங்க. பேரருள் கிட்டும்