பரிசு!பிரிந்து செல்லும்போதுஎல்லோரும்நினைவுப்பரிசு கொடுப்பார்கள்;நீ மட்டும்தான்உன் நினைவையேபரிசாகக் கொடுத்தாய். எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி.
ஈரம்!வயல் எங்கும்விளைந்து கிடக்கும்கான்க்ரீட் கட்டிடங்களுக்குஅடியில்காய்ந்து கிடக்கின்றன...ஏரோட்டியவனின்வியர்வைத் துளிகள்! ப.உமாமகேஸ்வரி,
நெய்வேலி.
சர்வாதிகாரி!கையில் பிரம்புடன்ஹிட்லர் பற்றிபாடம் நடத்தினார்ஆசிரியர்;ஆசிரியரைவிடஹிட்லர் நல்லவனாகத் தெரிந்தான் மாணவனுக்கு! இரா.கமலக்கண்ணன்,
சித்தோடு.
தேடுதல்அன்றுஐந்தடியில் கிடைத்தது;இன்றுஐநூறடியில் தேடுகிறோம்...ஆச்சரியப்பட வேண்டாம்.நாளை தண்ணீர்தங்கம் ஆகலாம்! பெ.பாண்டியன்,
காரைக்குடி.
கசப்பு...எறும்போசாறுபிழிந்த சக்கையில்இனிப்பைத் தேடுகிறது;மனிதனோவாழ்க்கை கசக்கிறதுஎன்கிறான்! சு.கலைச்செல்வன், குண்டுகுளம்.
மறுபிறவி!உலகையே தலைகீழாகமாற்ற நினைப்பவர்களை வௌவாலாகபடைத்துவிடுகிறார்கடவுள். சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.
கவலைமழைக்குக் குடை பிடித்தும்,எவரும்ஒதுங்காத கவலையில்காளான்! என்.மதியழகன், பெண்ணாடம்.