உயிர் பொம்மை : கவிதைக்காரர்கள் வீதி
* பள்ளிக்குச் செல்லும் குழந்தை விட்டுவிட்டுச் செல்கிறது மனதை பொம்மையிடம்
* பொம்மைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எந்த ரகசியமும் கசிவதேயில்லை
* அணைத்துக்கொண்டு தூங்கும் குழந்தையின் ஸ்பரிசத்தில் உயிர்பெறக்கூடும் பொம்மை
* குழந்தையை நடக்க வைத்து ஜெயித்தாள் அம்மா பொம்மையை நடக்க வைத்து தோற்றது குழந்தை
* பள்ளி விடுமுறை என்றதும் குழந்தையைவிட அதிகம் சந்தோஷப்பட்டது பொம்மை
* ‘நிலா தூங்காதா’ என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு
* அர்ச்சகரின் மந்திரங்களைவிட குழந்தையின் கூச்சலையே விரும்புகிறது சாமி
|