நியூஸ் வே





அகுழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனை போயிருந்த நேரத்தில் ஷில்பா ஷெட்டியின் வீட்டில் திருடு போய்விட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் காணவில்லை. அதிர்ச்சி அடையாமல், போலீசில் புகார் செய்யாமல், ரகசியமாக விசாரித்தார் ஷில்பா. வீட்டில் பல வருடங்களாக வேலை பார்க்கும் நம்பிக்கையான ஒரு வேலையாள்தான் திருடன் என்பது தெரிந்தது. நகைகளை மட்டும் வாங்கிக் கொண்டு, அவனை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் துரத்தி விட்டார் ஷில்பா!

அநடிகையும் மாடலுமான பத்ம லட்சுமி, தன் மகள் கிருஷ்ணா தமிழ் பேசுவதில் பரவசமாகி இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு இரண்டு வயது முடிந்திருக்கிறது. பத்ம லட்சுமி தமிழ், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், இத்தாலியன் என பல மொழிகளைப் பேசக் கூடியவர். ‘‘என் மகளும் எல்லாம் தெரிந்து கொள்கிறாள். ஆனாலும் என் தாய்மொழியான தமிழில் அவள் பேசுவது அவ்வளவு அழகாக இருக்கிறது’’ என்கிறார் பத்ம லட்சுமி.

அநீண்ட நாள் காதலன் சயீப் அலி கானை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் கரீனா கபூர். திருமணத்துக்காக கரீனாவுக்கு 50 பவுன் நெக்லஸ் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். விலை, ஜஸ்ட் 40 லட்ச ரூபாய்!

அவித்யா பாலனுக்கு புடவை ரொம்பப் பிடிக்கும். ‘‘நான் புடவை அணிவதற்காகவே பிறந்தவள். அது செக்ஸியான உடையும்கூட! சரியான அளவுக்கு உடலை மறைக்கிறது; சரியான அளவு காட்டுகிறது. ஆண்களை டீஸ் செய்ய இதுவே போதுமானது’’ என்கிறார்.

அகுழந்தை பெற்றபிறகு ஐஸ்வர்யா ராய் குண்டாகிவிட்டதை தேசியப் பிரச்னை ஆக்கப் பார்க்கின்றன சில மீடியாக்கள். கணவர் அபிஷேக் பச்சனிடம் ‘‘நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?’’ என்று சில நிருபர்கள் துளைத்து எடுக்க, ‘‘குழந்தை பிறந்தால் வெயிட் கூடுவது சகஜம்தான்! இது எங்களுக்குப் பிடிக்காவிட்டால் தத்தெடுத்து இருப்போமே! இதை ஏன் பிரச்னை ஆக்குகிறீர்கள்?’’ என்றார் அவர் தெளிவாக!