இன்வெஸ்டர் ராஷ்மிகா!



தீபிகா படுகோன், கரீனா கபூர், காத்ரீனா கைஃப் உள்ளிட்ட இந்திய நடிகைகள் வரிசையில் ராஷ்மிகா மந்தனா 100 % வேகன், விலங்கு வதையில்லா சூழலுக்கு ஏற்ற காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிக்கும் ‘ப்ளம்’ பிராண்டுடன் இணைந்து, முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆகியிருக்கிறார். 
இந்தக் கூட்டணி இந்தியாவில் ஜென் Z மற்றும் மில்லனியல் மக்களிடம் சூழலுக்கு நண்பனான காஸ்மெட்டிக்குகள் குறித்த விழிப்புணர்வையும் வழங்க இருக்கிறது.

ப்ளம் நிறுவனத்துக்கு ராஷ்மிகா தரப்பிலிருந்து இதுவரை 5 கோடி அமெரிக்க டாலர் முதலீடு வழங்கப்பட்டுள்ளது. 

இது வரும் காலத்தில் புதிய உச்சங்களை எட்டுமாம். “நம் காலநிலைக்கு, நம் இந்திய மண்ணின் தன்மைக்கேற்ற காஸ்மெட்டிக்குகள்தான் நம் சருமத்திற்கு ஆரோக்கியம் என்பதால் அதை வலியுறுத்தும் பொருட்டு தற்போது இதில் முதலீடும் செய்துள்ளேன்...’’ என்கிறார் ராஷ்மிகா.

காம்ஸ் பாப்பா