சாய்... சாய்!



சாய் பல்லவி, இப்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடிக்கிறார். அவ்வளவுதான். வேறெந்த படமும் கைவசம் இல்லை.

என்ன காரணம்?

சாய் பல்லவி பொதுவாகவே தனக்கு, அதாவது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார்.இதனால்தான் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் ஆர்வத்துடன் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் கடைசியாக ‘கார்கி’ படம் வெளிவந்தது.இப்படி அவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக ஒன்றும் ஆச்சர்யப்படுத்தவில்லை. இதுதான் அவரை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம்.

இனி இதுபோன்ற ஆஃப் -பீட் படங்களில் நடிப்பது இல்லை. கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்தால் போதும். அதுவும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாராம்.இதனால்தான் தேடி வரும் வாய்ப்புகளை அது இது என ஏதாவது சொல்லி தவிர்த்துவிடுகிறாராம். ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே இடைவெளி அதிகமிருந்தாலும் பரவாயில்லை. நல்ல கமர்ஷியல் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் முதலிலேயே சொல்லிவிடுகிறார் சாய் பல்லவி.

காம்ஸ் பாப்பா