ரத்த மகுடம் -132



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘நம் பாட்டியா..?’’ சிவகாமியின் கொங்கைகளுக்கு இடையில் முணுமுணுத்த கரிகாலன், மெல்ல தன் கீழ் உதட்டால் அவளது கச்சையை மேல் நோக்கி நகர்த்த முற்பட்டான். ‘‘ஆம்... நம் பாட்டி... நம்மிருவரின் பாட்டி...’’ கரிகாலனின் காது மடல்களைக் கவ்வியவள், அவனது கரங்கள் தன் பின்னெழுச்சியை அழுத்தியதும் ‘‘ம்...’’ கொட்டினாள்.சிவகாமியின் சுவாச வெளியேற்றம் அவனது செவிக்குள் ஊடுருவியதும் அவன் தேக நரம்புகள் அதிர்ந்தன. அந்த சப்தஸ்வரங்களை அவளது தேகம் பரிபூரணமாக ரசித்தது. இழைந்தது. லயித்தபடியே தன் தலையை உயர்த்தி அவனது கேசத்தை கோதினாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

கரிகாலனின் கருவிழிகள் அவளது நயனங்களை ஆராய்ந்தன.‘‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்..?’’ தன் நாவினால் அவனது நாசியை அளந்தாள்.
‘‘கணந்தோறும் மலர்கிறாய்...’’
‘‘மலர வைக்கிறீர்கள்...’’
‘‘நானா..?’’

‘‘பின்னே இல்லையா..?’’ கேட்டவளின் உதடுகள் அவனது கீழ் உதட்டைக் கடித்தன.
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’
‘‘பாட்டியை எப்பொழுது சந்தித்தாய்..?’’
‘‘என்னையா கேட்கிறீர்கள்..?’’
‘‘இல்லை... இதனிடம் கேட்கிறேன்...’’

கேட்டவனின் பார்வை சென்ற திக்கைக் கண்டதும் புன்னகைத்தாள். ‘‘அலுக்கவே இல்லையா..?’’
‘‘அதுதான் சொன்னேனே..?’’
‘‘எப்பொழுது..?’’
‘‘சில கணங்களுக்கு முன்...’’
‘‘என்னவென்று..?’’
‘‘கணந்தோறும் மலர்கிறாய்... கணந்தோறும் ரசிக்கிறேன்...’’

‘‘ஆளைப் பார்...’’ முழுமையாக அவன் உதட்டை ஆக்ரமித்தவளின் உமிழ்நீரை முழுமையாகச் சுவைத்தான். ஊற்று வற்றுவதில்லை. எனவே சுவைப்பதும்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு சிவகாமியே தன்னை விடுவித்துக் கொண்டாள். அவன் மீது கவிழ்ந்திருந்தவள் விலகி அவன் அருகில் படுத்தாள். ‘‘விட்டால் கடித்துத் தின்றுவிடுவீர்கள்... பிறகு எதுவும் மிஞ்சாது...’’ ‘‘அப்படியொரு நிலை உனக்கு ஏற்படாது...’’
‘‘ஏனோ..?’’

‘‘கடிக்க கடிக்க வளரும் வரத்தைப் பெற்றவளல்லவா நீ..?’’ திரும்பி தன் கரங்களை அவளது கொங்கைகளின் மீது வைத்தான்.நகராதபடியும் சில்மிஷங்கள் செய்யாதபடியும் அவன் கையை கெட்டியாகப் பிடித்தாள். கைகள் சொன்ன செய்தி கரங்களுக்குப் புரிந்தது. வைத்த கையை எடுத்துவிட்டு மல்லாந்து படுத்தான். ‘‘சொல் சிவகாமி...’’கருவிழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ‘‘நீங்கள் ஆபத்தானவர். என் சொற்களை மட்டுமல்ல... சொற்களுக்குள் புதையுண்ட வாக்கியங்களையும் அறிந்து கொள்கிறீர்கள்... செய்கையை வைத்தே பதிலைச் சொல்லி விடுகிறீர்கள்... தேகத்தின் அசைவை உணர்ந்தே நடக்கிறீர்கள்...’’‘‘இதைச் சொல்வதற்காகத்தான் என் கரங்களைப் பிடித்தாயா..?’’

‘‘இல்லை...’’ சிவகாமி எழுந்து அமர்ந்தாள். ‘‘பாட்டிக்கு உடனடியாக உங்களைக் காண வேண்டுமாம். அதுவும் அவசரமாக...’’
கரிகாலன் தன் தலையை உயர்த்தி அவள் மடி மீது சாய்த்தான். ‘‘பாட்டி எப்படியிருக்கிறாள்..?’’
‘‘தெரியாது...’’ அவனது குழலுக்குள் அவள் விரல்கள் அலைபாய்ந்தன. ‘‘பாட்டியை நான் சந்திக்கவில்லை...’’
‘‘ஏன்..?’’

‘‘நீங்கள் இல்லாமல் அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை...’’ குனிந்து அவன் தலையில் முத்தமிட்டாள். ‘‘செல்லலாமா..?’’
‘‘பாட்டியின் உடல்நிலை எப்படியிருக்கிறதாம்..?’’ முகத்தை திருப்பி அவள் மடியில் மல்லாந்து படுத்தான்.

‘‘பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் சொன்னவர் அதைத்தானே முதலில் குறிப்பிட்டிருப்பார்..?’’‘‘எனில் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பொருள்...’’‘‘ஆம்...’’ அவன் வதனத்தை தன் ஆள்காட்டி விரலால் வட்டமிட்டாள்.

‘‘அப்படியானால் சரி... இப்பொழுது பாட்டியைச் சந்திக்க வேண்டாம்... முக்கியமான செய்தி என்றால் தகவல் சொல்பவரின் வழியாகவே தெரிவிக்கும்படி சொல்லிவிடு...’’ தன் முகத்தை அவளது தொடைகளுக்கு இடையில் புதைக்க முற்பட்டான்.

சிவகாமி அதைத் தடுத்தாள். ‘‘இது தவறு... நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...’’‘‘கூடாதா..?’’‘‘கூடவே கூடாது. வயதானவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமை... அதுவும் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு பேரனுக்கு இருக்கிறது! அதுவும் அவராக உங்களைக் காண வேண்டும் என்று சொல்லி அனுப்பிய பிறகும் சந்திக்காமல் இருப்பது மிகப் பெரிய தவறு. உடனே பாட்டியைப் பார்க்க புறப்படுங்கள். நானும் உடன் வருகிறேன்...’’‘‘இப்பொழுது வேண்டாம் சிவகாமி...’’ கரிகாலன் எழுந்து அமர்ந்தான். ‘‘கடைசியாக நாம் பாட்டியை எப்பொழுது பார்த்தோம் என்று நினைவில் இருக்கிறதா..?’’

‘‘நன்றாக. வரும் சித்திரை வந்தால் மூன்று ஆண்டுகள்...’’
‘‘இடைப்பட்ட காலத்தில் நாம் ஏன் பாட்டியைச் சந்திக்கவில்லை..?’’
சிவகாமி பதில் அளிக்கவில்லை.

அவள் முகத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான். ‘‘காரணம் புரிகிறதல்லவா..?’’
அவன் நயனங்களுடன் தன் கருவிழிகளைக் கலந்தாள், ‘‘ம்...’’‘‘உனது சபதம் இன்னும் நிறைவேறவில்லை சிவகாமி... அது நிறைவேறிய பிறகு நாம் பாட்டியைச் சந்திப்பதுதான் அவர்களுக்கு கவுரவமாக இருக்கும். பெருமையும் சேர்க்கும்...’’சிவகாமியின் உதடுகள் துடித்தன.

தன் விரல்களால் அவளது உதடுகளை நீவினான். ‘‘நீயும் நானும் யார்..? பாட்டியால் வளர்க்கப்பட்டவர்கள். அப்பொழுது எனக்கு வயது பத்து. உனக்கு எட்டு. நம்மிருவருக்குமே விவரம் தெரிய ஆரம்பித்த பருவம் அது. அக்கணம் முதல் பாட்டியுடன்தான் இருந்தோம். நமக்கு உணவு ஊட்டியது முதல் தன் மடியில் படுக்க வைத்து நம்மை உறங்க வைத்தது வரை சகலமும் பாட்டிதான்.

நாள்தோறும் பாட்டியிடம் கதை கேட்போம். அவரும் சலிக்காமல் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்வார். ஆனால், நம் இருவருக்கும் பல்லவர்களின் வீரத்தைக் குறித்து கேட்கத்தான் ஆசை. பாட்டிக்கும் அதுவேதான் விருப்பம். எனவே பல்லவர்களின் பெருமையை... கற்கோயில்கள் கட்ட ஆரம்பித்த மகேந்திரவர்மரின் கனவை... நரசிம்மவர்மரின் வீரத்தை... பரஞ்சோதியின் விசுவாசத்தை... உணர்ச்சிபூர்வமாகச் சொல்வார்.

அனைத்தையும் கேட்ட பிறகும் நாம் சமாதானம் ஆக மாட்டோம். இறுதியாக ‘நீங்கள் சபதம் செய்ததைப் பற்றிச் சொல்லுங்கள் பாட்டி’ என்று ஒவ்வொரு முறையும் கேட்போம். பாட்டியும் பெருமூச்சுடன் மீண்டும் மீண்டும், தான் ‘வாதாபியை தீக்கிரையாக்குவதாகச் செய்த சபதம்’ குறித்து சொல்வார். விவரிப்பார். கண்கள் விரிய அதைக் கேட்டபடியே அவர் மடியில் உறங்குவோம்.

அப்படி வளர்ந்த நமக்கு... அதுவும் எனக்கு... சபதத்தின் அருமையும் அவசியமும் முக்கியத்துவமும் தெரியும் சிவகாமி. எனவேதான், நீ செய்திருக்கும் சபதத்தை என் மனதில் தாங்கியிருக்கிறேன்... கல்வெட்டாக பதித்திருக்கிறேன்... சாளுக்கியர்கள் காஞ்சியைக் கைப்பற்றிய தகவல் மல்லையில் நான் இருந்தபோது கிடைத்தது. அப்பொழுதுதான் நம் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் வளர்ப்பு மகள் நீ என்ற அடையாளத்துடன் மற்றவர்கள் முன்னிலையில் எனக்கு அறிமுகமானாய்.

நாம் இருவருமே இப்பொழுது வரை மல்லையில் முதன் முதலில் அறிமுகமானவர்களைப் போல்தான் நடித்துக் கொண்டிருக்கிறோம்... அதனால்தான் ‘உனது சுயரூபம் வேறு... உன் சபதத்தை அறிந்தால் நான் நிலைகுலைவேன்...’ என பல்லவ மன்னரின் தாயாதியான ஹிரண்ய வர்மர் முதல் சாளுக்கிய மன்னர் வரை பலரும் சொன்னபோதும், ‘உன்னிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி’ அறிவுறுத்தியபோதும், மனதுக்குள் சிரித்தேனே தவிர வெளியில் ‘அப்படியா’ என புதியதாகக் கேட்பது போலவே நடமாடினேன்.

நாம் இருவரும் பால்யம் முதலே அறிமுகமானவர்கள் என்பதோ பால்ய காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்பதோ ஒருவருக்கும் தெரியாது. நம் இருவரின் நடிப்பும் அந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு காரியங்களை நம்மால் நிகழ்த்தவும் முடிந்திருக்கிறது.

இன்னும் சில காலம்தான் சிவகாமி... அதுவரை நம் பழைய வாழ்க்கையை ஒருவரும் அறியாதபடி நாம் நடந்து கொள்வதுதான் சரி. சொல்லப்போனால் முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இனிதான் நாம் இருக்க வேண்டும். முக்கால் கிணறு தாண்டியிருப்பது பெரிதல்ல. மிச்சமிருக்கும் கால் கிணற்றையும் பாதிப்பின்றி தாண்ட வேண்டும்.

இந்த கரிகாலன் உனக்கானவன்... உன்னுடையவன்... உன்னில் கலந்தவன்... உனக்கு மட்டுமே சொந்தமானவன்... உனது சபதத்தை நிறைவேற்றத்தான் இவ்வளவு முயற்சிகளையும் மேற்கொள்கிறேன்... நரசிம்மவர்மருக்கும் பரஞ்சோதிக்கும் எப்படி நம் பாட்டியின் சபதம் முக்கியமாகத் தெரிந்ததோ... அந்த சபதம் நிறைவேற எப்படி அவர்கள் அல்லும் பகலும் முயற்சித்தார்களோ... அப்படி இந்த கரிகாலனுக்கு இந்த சிவகாமியின் சபதம்...’’
அவளது கண்களை நோக்கி தன் உதடுகளைக் கொண்டு சென்றான்.

சிவகாமி தன் இமைகளை மூடினாள். அவள் நயனங்களில் அழுத்தமாக முத்தமிட்டான். ‘‘சபதத்தின் அருமை நம்மை விட நம் பாட்டிக்கு நன்றாகத் தெரியும்... எனவே அவரை நாம் சந்திக்காமல் இருப்பதற்கான காரணத்தை அவர் புரிந்து கொள்வார்...’’
சிவகாமியை தன் மார்பில் சாய்த்து இறுக்கி அணைத்தான்.

அவன் மார்பில் அவள் ஒன்றியபோது சட்டென விலக்கினான்.புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.‘‘இப்படிப் பார்க்காதே சிவகாமி... பிறகு நான் அனைத்தையும் மறந்துவிடுவேன்... புறப்படு... சென்று வென்று வா. இந்த முறை நீ கொடுக்கும் அடியில் ராமபுண்ய வல்லபரின் தலை சுழல வேண்டும்...’’ ‘‘உங்களுக்குத் தெரியுமா..?’’ விக்கிரமாதித்தர் படபடத்தார்.

கண்களைச் சிமிட்டினார் ராமபுண்ய வல்லபர்.‘‘ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத்தாரகையுமான சிவகாமி எந்த சிறுவனை தன் பேரனாக வளர்த்தார் என்பதை தாங்கள் அறிவீர்களா..?’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.

‘‘யார் அவன்..?’’
நிதானமாக அதேநேரம் அழுத்தமாகச் சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘எந்த பாலகன் காஞ்சி கடிகையில் படித்துக் கொண்டிருந்தானோ... எந்த பாலகனுக்கு வேளிர்களின் தலைவனாக ரகசியமாக முடிசூட்டினீர்களோ... எந்த பாலகனை கரிகாலனுடன் நட்பு பாராட்டும்படி கேட்டுக் கொண்டீர்களோ... அந்த பாலகன்தான் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியால் வளர்க்கப்பட்ட பேரன்!’’
சாளுக்கிய மன்னரின் கண்கள் விரிந்தன. ‘‘அவனது பூர்வீகம் என்ன போர் அமைச்சரே..? எப்படி அவன் சிவகாமியின் வளர்ப்பு பேரனாக மாறினான்..?’’

‘‘அவனது தாத்தாவின் வழியாக!’’
விக்கிரமாதித்தரின் கண்கள் இடுங்கின.‘‘ஆம் மன்னா... அவன் தாத்தாதான் அவனை வளர்க்கும் பொறுப்பை ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியிடம் ஒப்படைத்தார்...’’‘‘அவன் தாத்தா யார்..?’’‘‘மணிமங்கலம் போரை பல்லவர்கள் சார்பாக தலைமையேற்று நடத்திய... வாதாபி வரை சாளுக்கியர்களைத் துரத்திய... வாதாபி நகரைத் தீக்கிரையாக்கும் திட்டத்தை வகுத்த... தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக அசுரப் போர் வியூகத்தை வகுத்து அதைத் திறம்பட அரங்கேற்றிய... பரஞ்சோதி!’’

(தொடரும்)  

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்