டாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா!



ஆஸ்திரேலியாவில் ஒரு கடையில் டாய்லெட் பேப்பர் வாங்க மூன்று பெண்களுக்கு இடையே நடந்த ஒரு சண்டைதான் இணையத்தில் இப்போது ஹாட் டாக்.

இதற்கு மூல காரணம் கொரோனோ வைரஸ்தான். ஆம்; கொரோனா வைரஸ் பல வழிகளிலும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முகத்தில் அணியும் மாஸ்க், கை கழுவும் சானிடைஸர், டாய்லெட் பேப்பருக்கு உலகம் முழுவதும் பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதற்கு உதாரணம்தான் அந்தப் பெண்களுக்கிடையேயான சண்டை.

இதுபோக இன்னொரு சம்பவமும் வைரலாகிவருகிறது. பெயர், இடம் வெளியிடப்படாத ஒரு பலசரக்குக் கடை. அங்கே டாய்லெட் பேப்பர் அடுக்கி வைத்திருக்கும் ரேக்குகள் காலியாக இருக்கின்றன. டாய்லெட் பேப்பர் வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ஏமாற்றத்துடன் ரேக்குகளை வெறித்துப் பார்க்கிறார். இந்தக் காட்சியும் புகைப்படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.

த.சக்திவேல்