சிரிங்க பாஸ்



‘‘நம்ம கல்யாண நாளை எப்படிங்க மறந்திங்க!?’’
‘‘நீ தானே ‘கெட்டதை எல்லாம் கனவா நினைச்சு மறந்துடணும்’னு சொன்னே!’’

‘‘மன்னா! உங்களைப் புகழ்ந்து பாட ஒரு சாமியார் வந்திருக்கிறார்!?’’
‘‘அட கடவுளே... என் நிலைமை அவ்வளவு கேவலமாகவா போய்விட்டது!’’

‘‘மயக்க ஊசி போடறவர் இன்னும் வராதப்ப நீங்க ஆபரேஷனை ஆரம்பிச்சுட்டிங்களே டாக்டர்?!’’
‘‘அவர் பொறுப்பில்லாம லேட்டா வருவாரு... அவருக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்க முடியுமா?’’

‘‘போலீஸ் காவல்ல அந்த சாமியார் உலர்ந்த பழம்தானே கேட்கறாரு... ஏன் தரலையாம்?’’
‘‘விஸ்கில ஊறவச்சு கேட்கறார்!’’

‘‘நீ செஞ்சிருக்கிற குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா!?’’
‘‘உங்க செலவுல என்னை சட்டம் படிக்க வைங்க எசமான்... படிச்சுட்டு வந்து சொல்றேன்!’’

‘‘நடுராத்திரில தலைவர் கிட்ட இருந்து போன் வந்தா ஏன் நடுங்கற?’’
‘‘அந்த நேரத்துல ‘சரக்கு வாங்கிட்டு வா’ன்னு சொன்னா, நான் என்னபண்றது?!’’

‘‘எதுக்கு டாக்டர் வார்டுலயே ஆபரேஷன் செய்யறிங்க!?’’
‘‘ஆபரேஷன் தியேட்டர்ல ஆவிங்க தொல்லை அதிகமா இருக்கு!’’

 எஸ்.எஸ்.பூங்கதிர்