அஞ்சு பன்ச்-ஏ.ஆர். ரஹ்மான்
*பாடல்களில் நவீனமாக முயற்சி செய்தாலும், ரசிப்பதென்னவோ எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்கள்தான். வீட்டில் இருந்தால் அந்தப் பாடல்களை அவரே பாடிக் கேட்கலாம். *ஆஸ்கார் வரைக்கும் போனாலும் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் வறுமை.
*வீட்டில் சகோதரிகள், அம்மா என அத்தனை பேரும் வாய் நிறைய அழைப்பது ‘ரஹ்மான்’ என்றுதான். செல்லப்பெயர்கள் இல்லை.
*எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் ஐந்து முறை தொழுது விடுவார். ஜனவரி 6ம் தேதி பிறந்த நாளின் போது எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார்.
*தங்க நகைகளின் மீது ஈடுபாடில்லை. கடிகாரம் கூட அணியமாட்டார். ரசம் சோறு இருந்தாலே திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவார்.
நன்மதி
|