செம போத ஆகாத



மிஷ்டி

‘‘பெங்காலில ‘பொரிசோய்’ படத்துல அறிமுகமானேன். அதோட இயக்குநர் ரூபாலி குஹாவும் ‘செம போத ஆகாத’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் சாரும்  நல்ல நண்பர்கள். அவங்க மூலமாத்தான் தமிழுக்கு வந்தேன். சொந்த ஊரே மேற்கு வங்காளம்தான். மாடலிங் டு சினிமா ட்ராவல்!என்னை இந்தியா  முழுக்க தெரிய வைச்சது சுபாஷ்கய்யோட ‘காஞ்சி’ இந்திப் படம். இதைப் பார்த்துட்டுதான் தென்னிந்தியப் படங்கள்ல வாய்ப்பு வந்தது...’’ என்று  சொல்லும் ஒரிஜினல் பெங்கால் ரசகுல்லாவான மிஷ்டி, மீண்டும் இந்தியில் கமிட் ஆகியிருக்கிறார்.