நெத்தியடி!



‘மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் என் சாய்ஸ்’ என்று சொன்ன சுனில் ஷெட்டியின் பேட்டி, ரியலி ஸ்வீட்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; நரசிம்மராஜ், மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; மனோகர், கோவை.

வாராக்கடனுக்கு அரசின் கொள்கைகளோடு பொறுப்பில்லாத வங்கிகளின் நிர்வாகமே காரணம் என நெத்தியடியாக பேசியது வங்கி நிதிமோசடி கட்டுரை.
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு.

வைர பாலீஷ் தொழில் வீழ்ச்சிக்கு கடன்தான் காரணம் என்பது வேதனையான நியூஸ்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நரசிம்மராஜ், மதுரை.

கைமாறு கருதாத சிவாஜியின் ரசிகையான செங்கல்பட்டு கிரிஜா போல இனிமேல் நடிகர்களுக்கு ரசிகை கிடைப்பாரா என ஆச்சர்யமானது.
- அக்‌ஷயா கீர்த்திகா, திருவண்ணாமலை; அனுபமா, சென்னை; சண்முகராஜ், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இந்தியரான தைசனின் கராத்தே கலாட்டா செம தூள்.
- முத்துவேல், கருப்பூர்.

சித்திரமொழி வித்தகர் பிரேம் பெஹாரி பங்களித்த அரசியலமைப்புச் சட்ட நூல், காலம் கடந்து நிற்கும் கிளாசிக் படைப்பு.
- முத்துவேல், கருப்பூர்; லட்சுமி நாராயணன், வடலூர்.

கடாபியின் உழைக்கும் எண்ணம் அவரின் மா உலா டாக்சி பணியை எவரெஸ்ட் உயரத்திற்கு உயர்த்தும் என்பது உறுதி.
- மயிலை கோபி, அசோக்நகர்; குமார், விழுப்புரம்; சண்முகராஜ், சென்னை; பாபு கிருஷ்ணராஜ், கோவை.
 
நடிகர்களில் பலரும் கிராமவாசிகள்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ இயக்குநர் கவிதாபாரதி!
- கைவல்லியம், மானகிரி; நரசிம்மராஜ், மதுரை.

மயிலாப்பூரின் லேண்ட்மார்க்காக மாறிவிட்ட ஆழ்வார் கடையை திரும்ப நடத்த உதவுவதே வாசிப்பை ஊக்கப்படுத்திய ஆழ்வாருக்கு நாம் செய்யும் பேருதவி!
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சித்ரா, திருவாரூர்; ராம கண்ணன், திருநெல்வேலி; தேவா, கதிர்வேடு; வள்ளி  குமாரசாமி, சென்னை; குமார், விழுப்புரம்; ஜானகி
ரங்கநாதன், சென்னை; ஜெயராஜ், சென்னை.

மனிதநேய மருத்துவர்களான யோகி ஆரோனும், குஷ் ஆரோனும் உண்மையில் மகா தெய்வ டாக்டர்கள்தான்.
- சோழாபுகழேந்தி, கரியமாணிக்கம்; முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; மாரிமுத்து, ஈரோடு.

டைரக்டர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் பேட்டியும் அவரின் படம் பற்றிய அறிமுகமும் புதுசு.
- நாகராஜன்,திருச்சி.

மன்னார் மிலிட்டரி ஹோட்டல் வரலாறும், பிரியாணி, ஆட்டுக்கால் பாயா ரெசிபிகளும் வாயில் எச்சிலூற வைத்துவிட்டன.
- தேவதாஸ், பண்ணவயல்; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; தேவா, கதிர்வேடு.

அழகுக்காக உயிரை விலையாக கொடுக்கக்கூடாது என்பதை ஸ்ரீதேவியின் இறப்பு மூலம் அறிந்துகொண்டது வேதனை!
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மணிமாறன், திருவண்ணாமலை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; சிதம்பரக் குமாரசாமி, அசோக்நகர்; நாகராஜன், திருச்சி; தியாகராஜன், கீழ்வேளூர்; முத்துவேல், கருப்பூர்; நவாப், திருச்சி; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; நடராஜன், சென்னை; ஜானகி, உடுமலைப்பேட்டை; ராஜ்குமார், குன்னூர்; மகாலெஷ்மி, காரைக்கால்.    

- ரீடர்ஸ் வாய்ஸ்