செருப்பு மாலை!



மத்தியப்பிரதேசத்தில் தாம்நாடு பகுதியில் உள்ளூர் தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர் தினேஷ் சர்மா வாக்கு கேட்கச் சென்றபோது நிகழ்ந்தது மறக்க முடியாத அவமானம். வாக்கு சேகரிக்க ஆசையாக சென்றவருக்கு, சிம்பிளாக கழுத்தில் செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள் மக்கள்!

‘‘அவர்கள் எனது ஊர் மக்கள். விரக்தியால் இப்படிச் செய்திருக்கின்றனர். நான் அவர்களின் பிள்ளை போல. பிரச்னைகளை பேசித் தீர்வு காண்போம்...’’ என சமாளிப்பு பேட்டி தட்டியுள்ளார் தினேஷ் சர்மா. ஊரில் நிலவிய குடிநீர் பற்றாக்குறை சிக்கல்தான் மக்களை அப்படிச் செய்ய வைத்துள்ளது என பின்னர் தெரிய வந்துள்ளது.

- ரோனி