‘ஸ்ரீ’ சொல்லாததால் ஒரு வார சம்பளம் கட்!



மேற்கு வங்கத்திலுள்ள மகத்பூரில் எல்லை பாதுகாப்புப்படை முகாம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த சஞ்சீவ்குமார், பரேடில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி என்பதை மோடி என்று மட்டும் குறிப்பிட்டது மேலதிகாரி அனுப்லால் பகத்தை கண்சிவக்க வைத்துவிட்டது.

அதாவது, ‘மரியாதைக்குரிய அல்லது ஸ்ரீ’ என்ற சொற்களை பயன்படுத்தாமல் வெறும் மோடி என்று சொன்னது குற்றம் என்று சொல்லி ஒரு வார சம்பளத்தை வெட்டிவிட்டனர். விஷயம் மீடியாவில் வெளியாகி சர்ச்சையாக, இப்போது சஞ்சீவ்குமாருக்கு வார்னிங் கொடுத்து சம்பள வெட்டிலிருந்து விடுவித்திருக்கின்றனர்.

- ரோனி