பாலைவன மன்னர்!



- ரோனி

எதிரிகளை நொறுக்கி தேசத்தைக் காப்பாற்றி, பிற நாடுகளைக் கைப்பற்றி வாகை பூ சூடுவது இன்றைய காலத்தில் சாத்தியமா? முடியும் என்கிறார் சுயாஷ் தீக்சித். எகிப்து மற்றும் சூடானுக்கு இடையிலான பிர் தவில் என்ற பகுதியின் மன்னராக கத்தியின்றி ரத்தமின்றி தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிறார் சுயாஷ். கிறுக்குத்தனமாக தோன்றினாலும், எகிப்து மிலிட்டரியின் பர்மிஷன் வாங்கி இதனை சாதித்ததுதான் முக்கியமான விஷயம்.

சாலைகளில்லாத பாலைவனப்பகுதி பிர் தவில். பொருட்கள் எடுத்துவரக்கூடாது, ஒரே நாளில் திரும்பிவிடவேண்டும் என்ற கண்டிஷன்களை அலட்சியம் செய்த சுயாஷ், அங்கு விவசாயம் செய்யப்போவதாகவும், தன் நாட்டுக்கான கொடியை ஊன்றப் போவதாகவும் வெளியிட்ட கோக்குமாக்கு காமெடிதான் சோஷியல் தளங்களில் இன்றைய வைரல் ஹிட். பப்ளிசிட்டி, அதானே எல்லாம்!