மீனின் கண்கள்



ஃப்ரீஸர் மீனை
ஐஸ் கரைவதற்கு
ஒரு பாத்திரத்தில்
எடுத்து வைத்தேன்
ஃப்ரீஸர் மீன்
மிகுந்த இறுக்கத்துடன்
தூங்கிக்கொண்டிருக்கிறது
அம்மு அதன்
அசைவற்ற

கண்களையே
அமைதியிழந்து பார்த்துக்கொண்டிருந்தாள்
‘அம்மா
மீனை பாத்திரத்திலிருந்து எடுத்து
தண்ணீரில் விடு
அதற்கு உயிர் வந்து விடும்’
என்றாள் அம்மு
நாங்கள்
எங்கள் பனிக்கோளங்களிலிருந்து
எங்கள் தண்ணீருக்கு திரும்புவோம்
என்று ஒரு கணம் நினைத்துக்கொண்டேன்
கண்ணீருடன்
அப்போது என் கண்களும்
இந்த மீனின் கண்களைப்போலவே
இருந்ததா?

செல்வி ராமச்சந்திரன்