நவம்பர் (16-30) ராசி பலன்கள்



பெருங்குளம்  ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்: ‘‘மேஷ முயற்சி’’ என்பதற்கேற்ப அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். சப்தம ராசியில் சனி இருந்தாலும் குரு நான்காம் இடத்திலும், ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருந்தும் பல்வேறு நற்செயல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ராசிநாதன் செவ்வாயின் சுக ஸ்தான பார்வை மிகவும் வலிமையானதாகும். தன, வாக்கு.

குடும்ப ஸ்தானாதிபதி அந்த இடத்திற்கு கேந்திரம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். சனி களத்திரஸ்தானத்தில் இருந்து சிற்சில குழப்பங்களை விளைவித்தாலும் ராகுவின் மூன்று, பதினொன்றாம் பார்வையால் தந்தை, தந்தை வழி உறவினர்கள் மற்றும் பிள்ளை களுடன் கருத்து மோதல்கள் வரலாம். அஷ்டமஸ் தானத்தை குரு பார்ப்பதால் சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியா மல் போகும். கர்மாதிபதி சனி பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. சுக ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதும், குரு அந்த இடத்தில் இருப்பதும் எதிர்பாராத அதிர்ஷ்டம் மாதத்தின் பின்பகுதியில் கிடைக்கும். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். பெண்களுக்கு இந்த காலகட்டம் முன்னேற்றங்களை தரும் காலமாக இருக்கும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால், வீண் அலைச்சல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத மத்திப் பகுதி மிகுந்த லாபமாக இருக்கும். பிற்பாதி கவனமுடன் இருக்க வேண்டி வரும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய் ஹோரையில் அருகிலிருக்கும் வினாயகர் கோயிலுக்கோ அல்லது முருகன் கோயிலுக்கோ சென்று வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘‘ஓம் கம் கணபதயே நமஹ’’ என தினமும் 16 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்.
அதிர்ஷ்ட தினங்கள்: இல்லை.

ரிஷபம்: ‘‘ரிஷப துணிவு’’ என்பதற்கேற்ப எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்து வீர்கள். சிற்சில பிரச்னைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள்.தன வாக்கு ஸ்தானத்திற்கு ராசிநாதன் சுக்கிரன் திரிகோணம் பெற்றிருப்பதால் மிகுந்த அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.  இருப்பினும் விரையாதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையால் வீண் கலகமும் அலைச்சலும் இருக்கும், ஆனாலும் குருவின் இருக்கையால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும்.

நன்மைகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை.  உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்
தங்கள் நிறைவேறும்.

வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.  தொழில் ஸ்தானாதிபதி
சனி சாதகமாக காணப்படாததால் நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.

தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்து தான் கோரிக்கைகள் நிறைவேறும். பெண்களுக்கு  இந்த காலகட்டத்தில் இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக
அமையும். கைவிட்டுப் போன சொத்துகள் மீண்டும் வந்து சேரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நதிக்குச் சென்று விளக்கு போட்டு விட்டு வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘‘ஓம் க்ரீம் ஹ்ரீம் க்லீம் குருவே நமஹ’’ என தினமும் 12 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், தேய்பிறை: திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட தினங்கள்: இல்லை.

மிதுனம்: ‘‘மிதுன அனுசரிப்பு” என்பதற்கேற்ப அனைவரையும் அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்து போவீர்கள்.  ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன் இருக்க தனஸ்தானத்தில் குரு இருக்க நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். வசதியான வீட்டிற்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள்.

சந்தானபாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.

 சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும்
உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். வெளிநாடு சென்று படிக¢க நினைத்தவர்கள்
அதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு பொன்னான காலம் இது. தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவச் செலவு குறையும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘‘ஓம் நமோ மாதவாய நமஹ’’ என தினமும் 23 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன்; தேய்பிறை: திங்கள், புதன்.
அதிர்ஷ்ட தினங்கள்: இல்லை.

கடகம்: ‘‘கடக பாசம்’’ என்பதற்கேற்ப  அனைவரிடமும் பாசமாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் தனவாக்கு குடும்பாதிபதி சூரியன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும் லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். அவருடன் சுகலாதிபதியும் பார்க்கிறார். சனி சுகஸ்தானத்தில் இருக்கிறார். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.

ஆனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். களத்திரஸ்தானத்தை ராசியில் இருக்கும் உச்ச குரு பார்க்கிறார், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாய் அந்த ஸ்தானத்திற்கு திரிகோணம் இருக்க, அந்த இடத்தை குரு பார்க்க என சந்தான பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.

உத்யோகஸ்தர்கள் அதிக வேலைப் பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.  பெண்களுக்கு: மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள்.

காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவ மணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் வரும் சந்திர ஹோரையில் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘‘ஓம் சம் சோமாய நமஹ’’ என தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி, தேய்பிறை: திங்கள், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17.

சிம்மம்: “தோரணை சிங்கம்’’ என்பதற்கேற்ப எதிலும் தனது தோரணையை வெளிப்படுத்துவீர்கள். சுகஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும் அதே ஸ்தானம் குரு பார்வை பெறுவதும் சிறப்பு. நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

சுப விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.உத்யோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

சிலர் மேலதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேலை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேருவர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக
வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.

பெண்களுக்கு வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம். தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்கு தங்கு தடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பரிகாரம்: வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்குப் படைத்து அவரின் அடியவராகுங்கள். அவரின் அடியார்க்கு எல்லாம் நிறைவாகவே இருக்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ பகவதே ருத்ராய நமஹ” என தினமும் 18 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19.

கன்னி: “அமைதி கன்னி” என்பதற்கேற்ப எந்த பிரச்னையிலும் அமைதியாகவும் அதே வேளையில் பெரியோர் அறிவுரைகளோடும் முடி வெடுப்பீர்கள். தற்போதிருக்கும் கிரக சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும்.

காரிய அனுகூலங்களும் உண்டு. தனஸ்தானத்தில் இருக்கும் சனியாலும், ராசியில் இருக்கும் ராகுவாலும், சப்தமத்தில் இருக்கும் கேதுவாலும் செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். களத்திர ஸ்தானத்தை குரு நவ பார்வையால் பார்ப்பதால் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறும். முயற்சி களை தொடர்ந்து செய்வது நல்லது.

உத்யோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். மாதக் கடைசி வாரம் மிகவும் நன்றாக இருக்கும். இரண்டுக் குரியவர் சுக்கிரனின் சஞ்சாரத்தால் வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்னை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.

எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவரின் சஞ்சாரத்தால் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். பெண்களுக்கு பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப் படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும். கலைத்துறையினருக்கு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதியஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால், பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். மாணவ மணிகள் தீவிர முயற்சி எடுத்துப்படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என தினமும் 15 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21.

துலாம்: “நீதி துலாம்’’ என்பதற்கேற்ப எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள். தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிற்சில பிரச்னைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். மூன்றாம் இடத்தை சனி பார்ப்பதால் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். தனாதிபதி செவ்வாயால் வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

 கேதுவால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பத்தாமிடத்தில் சஞ்சாரிக்கும் குரு தனவாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரயம் ஆகலாம்.

சுகபஞ்சமாதிபதி சனி குரு சாரத்தில் சஞ்சரிப்பதால் காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். லாபஸ்தானாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்னைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும்.

செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு  எந்த ஒரு  சிக்கலான பிரச்னைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் அனைத்திலும் நன்மையே நடக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத மத்தியில் பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிதோறும் மஹாலக்ஷியை வணங்கி 7 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் கோளறு பதிகம் சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23.

விருச்சிகம்: “தலைமை தளபதி தேளான்” என்பதற்கேற்ப சீரிய வீரத்தாலும், தனியாற்ற லாலும் அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்ப்பீர்கள். நன்மைகள் விளையக்கூடிய வகையில் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிக்கிறார். அவரின் பார்வை உங்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இருப்பது அதிக பலம். களத்திரவிரய ஸ்தானாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் முயற்சிகளில் கைகொடுக்க, தனபஞ்சமாதிபதி குரு உங்கள் ராசியை பஞ்சம பார்க்க என உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும்.
 ஆனால், அஷ்டமலாபாதிபதி
புதனின் சஞ்சாரத்தால் பணவிரயமும்
காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும்
எந்த பிரச்னையையும் முறியடிக்கும்
வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்
பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் பல நல்ல
அனுகூலம் ஏற்படும் அவர்களால் முன்னேற்றம்
ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக
செய்து முடிக்கலாம்.

உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஐந்தாமிடத்தில் உலவும் கேதுவால் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பெண்களுக்கு  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். பணத்தை நல்ல முறையில் சேமிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். மாணவ  மணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய் ஹோரையில் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கோ அல்லது முருகன் கோயிலுக்கோ சென்று வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் மங்களபுத்ரநாயகாய நமஹ” என தினமும் 18 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25.

தனுசு: “வில் அறிவுரை’’ என்பதற்கேற்ப அனைவருக்கும் எதிலும் அறிவுரை சொல்லத்தயங்க மாட்டீர்கள். சில நன்மைகளை அளிக்கும் வகையில் கிரகநாயகர்கள் சஞ்சரிக்கிறார்கள். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. பாக்கியாதிபதி சூரியன் விரயஸ்தானத்தில் இருந்தாலும் உங்கள் ராசிநாதனுக்கு திரிகோணம் பெறுவதால் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். சுக்கிரனின் சஞ்சாரத்தாலும், குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். பஞ்சம விரயாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்னைகள் வரலாம். ஆனாலும் ராசிநாதனின் அருட்பார்வை இருப்பதால் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலை தூக்கலாம்.

உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமுர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நமஹ” என தினமும் 18 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்.
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28.

மகரம்: “மகரச் சுடர்” என்பதற்கேற்ப எதிலும் எங்கேயும் தன்னம்பிக்கைச் சுடராக தன்னை முன்னிறுத்திக் கொள்வீர்கள். ராசிநாதன் சனி உச்சமாக இருப்பதாலும் அவரே தனஸ்தானத்திற்கு அதிபதி ஆவதாலும் எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் சனியால் இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும்.

 உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். லாபஸ்தானத்தைப் பார்க்கும் குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் ராசிநாதனுடன் இருக்கும் பாக்கியாதிபதி புதன் அள்ளித் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத கடைசியில் புதிய சொத்துகள் வாங்க நேரம் கைகூடி வரும்.

வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால், கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும்.

அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம்.  பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு மாத பின்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள்
கோயிலுக்கு சென்று 3 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “சாந்தாகாரம் புஜகசயனம்’’ என்ற விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: 29, 30.

கும்பம்: “கும்பத் தன்மை”  என்பதற்கேற்ப பிறரிடம் தன்மையான குணத்தை வெளிப்படுத்துவீர்கள். ராசிநாதன் சனி புதனுடன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். இறுக்கமான சூழ்நிலையிலும் சில நல்ல முன்னேற்றங்களைப் பெற போகிறீர்கள். எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்னையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.

தொழில் ராசியில் இருக்கும் சூரியன் சிற்சில சாதகமற்ற பலன்களைக் கொடுத்தாலும், ராசிநாதனின் நிலையால் நன்மையே நடக்கும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தைப் பார்க்கும் செவ்வாயால் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். ஆயுள்ஸ்தானாதிபதி புதனின் சஞ்சாரத்தால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும்.

சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. பெண்களுக்கு  எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால், மாத கடைசி மிகவும் சிறப்பாக இருக்கிறது.  மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும்.

பரிகாரம்: தினமும் சனி ஹோரை அல்லது சுக்கிர ஹோரையில் சிவன் கோயிலில் வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என தினமும் 12 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி தேய்பிறை: வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட தினங்கள்: இல்லை.

மீனம்: “மீன சுழற்சி” என்பதற்கேற்ப எதிலும் மற்றவர்களுக்காக சுழன்று உழன்று உழைப்பீர்கள்.  இந்த காலகட்டத்தில் ராசியில் கேது, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு, ஏழில் ராகு, அஷ்டமத்தில் சனி, புதன், பாக்கியஸ்தானத்தில் சூரியன் என கிரகங்களின் சஞ்சாரம் ராசியில் இருக்கிறது. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். அஷ்டமத்துசனி இருந்தாலும், பஞ்சம ஸ்தானத்தில் ராசிநாதன் இருப்பதால் முன்னேற்றப் பலன்கள் உண்டு.

இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. 

உத்யோகத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்னைகள் வரலாம். அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். ஆனாலும் லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகுருவே நமஹ” என தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி;
அதிர்ஷ்ட தினங்கள்: இல்லை.