சின்ன விஷயங்கள், பெரிய பலன்கள்!



வளம் தரும் வாஸ்து


‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’  என்பது தமிழர்கள் அறிந்த முதுமொழியே. இது போலவே வாஸ்து விஞ்ஞானத்தில் அணுவளவு பிசகினாலும் ஆட்டம் கண்டுவிடும்.அப்படி என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பதை கண்டறிவோம்.கட்டிடம் கட்டும்போது, தற்காலிக கொட்டகை அமைப்போம். அதனைக் கட்டிடம் கட்டக்கூடிய பகுதியின் தெற்கு, தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும்.

இப்படி கொட்டகை அமைக்கும்போது எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் அமைக்கக் கூடாது. இதையும் மீறி அமைக்கும்போது வழக்கு வியாஜ்யம், தொழிலாளர் பிரச்னை, நஷ்டஈடு, முழுவதும் கட்டி முடிக்க முடியாத சூழ்நிலை, பயன்படுத்த முடியாத சூழல், கடன் பிரச்னை, அரசாங்க தண்டனை போன்றவை விரைவில் வந்து தாக்கும்.இதனை மவுலிவாக்கம் கட்டிட கோர விபத்துடன் ஒப்பிடலாம்!

மேற்கண்டவாறுதான் கட்டிடம் கட்டியிருக்க முடியும். இரண்டு கட்டிடத்திற்கு தெற்கு-மேற்கில் மட்டுமே ஒரு கட்டிடம் இருந்திருக்க முடியும். ஆக ஒரு கட்டிடத்தின் வடக்கு-கிழக்கில் கட்டிடம் ஒன்று இருக்குமேயானால்  எல்லையில்லாமல் அதன் ஆயுள் குறையும். அங்கிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இப்படி நாம் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியாக எல்லையில்லாமல் அருகருகே வடக்கிலோ கிழக்கிலோ அமைந்த கட்டிடங்களில் பல பாதிப்புகள் வரும்.

 எனவே கட்டிடமோ துணைக் கட்டிடமோ பிரதானக் கட்டிடத்தின் வடக்கு, கிழக்கு, வடகிழக்கில் எல்லையின்றி அமைக்கக்கூடாது. மூலைகளில் வெட்டுடன் கட்டிடத்தை அமைக்கக்கூடாது. முகப்பு மண்டபம் அமைக்க, கார் நிறுத்த, புகுமுக இடம் என மூலைகளில் வெட்டுடன் அமைக்கக்கூடாது.ஒவ்வொரு மூலை வெட்டுக்கும் ஒவ்வொரு கெடு பலன்கள் அனுபவிக்க நேரிடும்.

* ஈசான்ய வெட்டு (வடகிழக்கு வெட்டு) -  குழந்தைகள் பாதிப்பு, குழந்தையின்மை, பொருட்கள் இழப்பு, வீட்டை விற்று வெளியேறுதல், தனிமையில் வாழுதல்,
அன்யோன்யம் இல்லாதிருப்பது, செல்வாக்கு இழத்தல்.
* ஆக்நேய வெட்டு (அக்னி மூலை) - பெண்கள் மூலம் பிரச்னைகள், சுறுசுறுப்பு இல்லாதிருப்பது, சகோதர வர்க்கம் பாதிப்பு, உணவுத் தட்டுப்பாடு, வெறிச்சோடி கிடப்பது, பராமரிப்பு இன்றி இருப்பது.
* தென்மேற்கு வெட்டு (நைருதி-குபேரமூலை) -  வசதி வாய்ப்பு இழத்தல், செல்வந்தராக இருந்து வறியவராதல், பதவியிழப்பு, அண்டை அயராலுடன் சண்டை.
* வடமேற்கு வெட்டு (வாயவியம்) -  வழக்கு, வியாஜ்யம், பெண்களால் பாதிப்பு, காலதாமத திருமணம், விவாகரத்து, சண்டை சச்சரவுகள், கடனால் ஜப்தி, கடனால் தற்கொலை, கடனால் சொத்து பறிபோதல், ஒற்றுமையின்மை, பரம்பரை வியாதியால் பாதிப்பு.

இப்படி நான்கு மூலைகளிலும் வெட்டு இருக்க வேண்டும் என்பதில்லை. ஏதேனும் ஒரு மூலையில் வெட்டு ஏற்பட்டாலும் அந்த மூலைக்குரிய பாதிப்பு இருக்கும். இப்படி கட்டிடத்தில் வெட்டு இருப்பது போன்றே நீட்சியாக அதாவது, வெளியே நீட்டிக் கொண்டு இருந்தாலும் இதே பலன்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 எனவே எப்போதும் 4 மூலைகள் உள்ளவாறே கட்டிடம் அமைக்க வேண்டும். சக்திகள் வெட்டுப்படாமல் நுகரமுடியும்.பொது சுவர் சிலர் வீடுகளில் தாய் சுவரை பொது சுவராகக் கட்டிக் கொள்வர். இதிலும் உரிமையாளர்கள் இடம் மீதியாவதை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். தம் வீட்டின் வடக்கு-கிழக்கு சுவரை எக்காரணம் கொண்டும் (காம்பவுண்ட் சுவர் உள்பட) பொது சுவராக கட்டலாகாது.

அப்படி கட்டினால் கிழக்கு சுவர் பொதுவாக கட்டிக் கொள்ளும் போது கிழக்கு காலியிடம் இல்லாமல் போய் அந்த வீட்டில் ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் புகழுக்கு பங்கம் ஏற்படும்.

இதே போல வடக்கு சுவரை பொது சுவராக கட்டிக் கொள்ளும்போது, அவ்வீட்டில் உள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  சமையலறைவீட்டின் தென்கிழக்கு, வடமேற்கில் மட்டுமே சமையலறை இருக்க வேண்டும். தென்மேற்கில் சமையலறை இருப்பின் ஓயாது வேலை வேலை என்று சமையல் வேலை செய்தே பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட்டே பொருள் அழிவு ஏற்பட்டு சிரமங்கள் வந்து சேரும்.

வடகிழக்கில் சமையலறை எனில் அவ்வீட்டு ஆண்கள் பாதிக்கப்படுவதுடன், வருமானம் வருவது அடைபட்டு வறிய நிலைக்கு செல்வார்கள். கண்ணாடி விளக்குகண்ணாடி கற்கள் பொருத்தப்பட்ட விளக்குகள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். சூரிய ஒளி, விளக்கு ஒளியை பிரதிபலிப்பதனால் அதிர்ஷ்டம் வந்து சேரும். கோயில்களில் கருவறை மேற்கில் வைத்து விளக்கை எரிய விடுவதைக் கண்டு இதன் பலனை அறிந்து கொள்ளுங்கள்.

முறம், துடைப்பம்

வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம், முறம் ஆகியவற்றை ஒதுக்குபுறமாக, அடிக்கடி கண்ணில் படாமல் வைக்கவும். தலைகீழாக வைப்பது செல்வம் தவறாக வெளியேறாமல் தடுக்கும்.

நீர்க்குழாய்கள்

குழாய்கள் நீரை எப்போதும் சொட்டாமல் இருக்குமாறு பராமரிப்பு செய்து கொள்ளவேண்டும். நீர் சொட்டிக் கொண்டிருக்கும் நிலை செல்வத்தை வெறியேற்றும் சாதனமாக மாறி விடும்.
செடிகள்நோய்வாய்ப்பட்ட, இறந்த செடியை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். தீய சக்தியை வரவழைக்கும் காலனாக இவை மாறிவிடும்.

இதை அகற்றி புதிய செடியை பராமரிக்கவும்.
தரையை தொடும் செடிகள் உள்ளக்கிளர்ச்சியை தூண்டி, தளர்ச்சி, மன அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும். எனவே இவற்றை கவாத்து செய்து நீக்க வேண்டும். மஞ்சள், சிவப்பு மலர்கள் தரும் செடி, மரங்கள் சிறந்தவை. வீட்டின் முகப்பு வாயிலில் இவற்றை பராமரிக்க சிறப்பான பலன்களை நுகர முடியும். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய பலன்களை சுட்டுகின்றன. அவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)