என்னென்னவோ தெரியுது.. ஏதேதோ செய்யுது!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
 நடுப்பக்க பளீர் படத்தைப் பார்த்ததுமே மார்கழிக் குளிருக்கு சூடாக ஜம்மென்று இருந்தது. - கே.லட்சுமணன், நெய்க்காரப்பட்டி.
கோவா சர்வதேச திரைப்படவிழா குறித்து வி.பிரபாகர் எழுதுவது, வாசகர்களை கைப்பிடித்து கோவாவுக்கு அழைத்துச் சென்றது போலிருக்கிறது. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
‘பஞ்சாக்ஷரம்’ படம் குறித்த தகவல்கள் அப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிறவைத்தன. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
முன்னட்டை ராக்ஷி கன்னாவும், பின்னட்டை சஞ்சனா நடராஜனும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்கள். - எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் வரவிருப்பதை எண்ணி இப்போதே கை, கால்கள் எல்லாம் வெடவெடக்கின்றன. - கே.நடராஜன், திருவண்ணாமலை.
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ படம் குறித்த தகவல்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகின்றன. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நடுப்பக்கத்தில் மட்டுமா தெரியுது? புத்தகம் முழுக்கவே ஆங்காங்கே தென்படுகிற புளோஅப்களில் என்னென்னவோ தெரியுது. ஏதேதோ செய்யுது. - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
|