வாசிப்பு!
சரோஜாதேவி பதில்கள்
* புல்லாங்குழல் வாசித்தால் அதிகமாக பால் கறக்கலாம் என்று அஸ்ஸாம் எம்.எல்.ஏ ஒருவர் யோசனை கூறியிருக்கிறாரே? - சுவாமி சுப்பிரமணியா, குனியமுத்தூர். வாசிப்பு மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டுவோம்.
* இளம் பெண்கள் வயதான ஆண்கள் மீதும், இளம் ஆண்கள் வயதான பெண்கள் மீதும் ஈர்ப்பு கொள்கிறார்களே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. நீண்டகால அனுபவத்தை மதிக்கிறார்களோ, என்ன எழவோ?
* சாண் ஏறினால் முழம் சருக்குதே? - கே.நடராஜன், திருவண்ணாமலை. கையிலே எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு ஏறுறீங்களோ?
* பெருமழையை எதிர்ப்பார்த்து வெறும் தூறலாய் போனால்? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. பல்லு குத்த உலக்கையை எதிர்ப்பார்க்கலாமா? எதிர்ப்பார்ப்பற்ற வாழ்வே நிம்மதியான வாழ்வு.
* புத்தகத்தைப் புரட்டுவது; பெண்ணைப் புரட்டுவது : ஒப்பிடவும்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். இரண்டையுமே ஆழமாகப் புரட்டினால் புதையல் நிச்சயம்.
|