யோகிபாபுவுக்கு கல்யாணம்!



“எனக்குக் கல்யாண வயசுதான் வந்துருச்சிடி...” என்று ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவைப் பார்த்து பாட்டு பாடிய யோகிபாபுவுக்கு எப்போதோ கல்யாண வயசு வந்துவிட்டது.தனக்கு வரப்போகும் எதிர்கால மனைவி குறித்து அவருக்கு ஒரு கனவு இருக்கிறதாம். சினிமா நடிகைகளை மிஞ்சக்கூடிய அழகுடன் இருக்க வேண்டுமாம்.

அழகான மனைவி வேண்டும் என்பது அத்தனை ஆண்களின் எதிர்பார்ப்பும்தான். யோகிபாபு, ஏன் இதில் இவ்வளவு கண்டிப்பு காட்டுகிறார் என்றால்.... பிரபலமாவதற்கு முன்பாக சினிமாத்துறையில் சில நடிகைகளிடம் அவர் பட்ட அவமானங்கள்தான் காரணமாம். உங்களைவிட அழகான பொண்ணை நான் கட்டிக் காட்டுறேன் பாரு என்று அவர்களுக்கு சவால் விடும் வகையிலான பெண்ணாகத் தேடுகிறாராம்.

எனவேதான் அவருக்கு திருமணமாவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தேடல் முடிந்து, விரைவில் டும் டும் டும் நிச்சயம் என்கிறார்கள் யோகிபாபுவுக்கு நெருக்கமான நண்பர்கள்.

- கேகே