சப்பாத்திக்கு மாவு எப்படி...?



சரோஜாதேவி பதில்கள்

* எந்த இடத்தில் மச்சம் இருந்தால் மதிப்பு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
யாரும் அணுக முடியாத இடத்தில் அமைபவைதான் அரிதான அந்தஸ்தை பெறும் அதிசயங்களாகின்றன.

* ஞானப்பழம் கிடைத்தால் எனக்கு கொடுப்பீர்களா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் பழம். மத்தவங்களுக்கெல்லாம் காய்தான்.

*கடுந்தவத்தில் இருப்பவர்களும் கன்னிப் பார்வைகளால் கவிழ்ந்து விடுகிறார்களே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
ரிஷிகளாக இருந்தாலும் ஆண்களால் தவிர்க்க முடியாத தோஷம் கன்னி தோஷம்.

* சரோஜா மாமி, சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டுமானால் மாவு எப்படி...?
- திலீபன், தூக்கநாயக்கன்பாளையம்.
சிவசிவா. போதும் நிறுத்துங்கோ சாமி. சமையலெல்லாம் எங்க ஆத்துக்காரர் டிபார்ட்மென்ட். அவராண்டே கேளுங்கோ.

* கட்டிப் பிடித்தால் கவலை தீருமா?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
கவலை தீருமான்னு தெரியாது. வெயில் காலத்தில் கொஞ்சம் கசகசன்னுதான் இருக்கும்.