சப்பாத்திக்கு மாவு எப்படி...?
சரோஜாதேவி பதில்கள்
* எந்த இடத்தில் மச்சம் இருந்தால் மதிப்பு? - த.சத்தியநாராயணன், அயன்புரம். யாரும் அணுக முடியாத இடத்தில் அமைபவைதான் அரிதான அந்தஸ்தை பெறும் அதிசயங்களாகின்றன.
* ஞானப்பழம் கிடைத்தால் எனக்கு கொடுப்பீர்களா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் பழம். மத்தவங்களுக்கெல்லாம் காய்தான்.
*கடுந்தவத்தில் இருப்பவர்களும் கன்னிப் பார்வைகளால் கவிழ்ந்து விடுகிறார்களே? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ரிஷிகளாக இருந்தாலும் ஆண்களால் தவிர்க்க முடியாத தோஷம் கன்னி தோஷம்.
* சரோஜா மாமி, சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டுமானால் மாவு எப்படி...? - திலீபன், தூக்கநாயக்கன்பாளையம். சிவசிவா. போதும் நிறுத்துங்கோ சாமி. சமையலெல்லாம் எங்க ஆத்துக்காரர் டிபார்ட்மென்ட். அவராண்டே கேளுங்கோ.
* கட்டிப் பிடித்தால் கவலை தீருமா? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். கவலை தீருமான்னு தெரியாது. வெயில் காலத்தில் கொஞ்சம் கசகசன்னுதான் இருக்கும்.
|