உதயன்

அப்பா, அண்ணன் என குடும்பமே அடிதடி தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அமைதியான வாழ்க்கை தேடி செல்கிறார் நாயகன் அருள்நிதி. அன்பு காதலி, அரட்டை அடிக்க நண்பன் என ஜாலியாக பொழுதை கழிக்கும் வேளையில் இவருடைய வாழ்க்கையில் வில்லன் நுழைகிறார். வில்லனுக்கு நாயகன் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள அருள்நிதி நடிப்பிலும் டபுள் எனுமளவுக்கு சண்டை, காதல் காட்சிகளில் அமர்க் களப்படுத்துகிறார். ப்ரணிதா, பானு இருவருக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அழகோவியமாக மனதில் தங்குகிறார்கள். சந்தானம் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகிறது. மணி காந்த் இசையில் பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
கமர்ஷியல் கதை யில் அழகான காதலை போரடிக் காமல் சொல்லி யிருக்கிறார் இயக்குனர் சாப்ளின்.
|