வித்தியாசமான ஜனனி!



கொஞ்சம் பெயர் எடுத்த நடிகைகள், கதை என்ன, ஹீரோ யார்? என பல கேள்விகளுக்குப் பிறகுதான்  படங்களை கமிட் பண்ணுவார்கள். ஆனால் அந்த லிஸ்ட்டில் ஜனனி அய்யர் கொஞ்சம் வித்தியாசப்படுகிறார்.

 பாலா படத்தில் நடித்திருந்தாலும் பிகு பண்ணாமல் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘மஞ்சள் சிவப்பு கருப்பு’. இதில் கதை நாயகனாக பசுபதி நடிக்கிறார். ஜெயன்வன்னேரி எழுதி இயக்கியிருக்கிறார்.

சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைக் கொலை செய்ய ஒருவன் திட்டமிடுகிறான். அந்த சமயத்தில் பெரிய மனிதனை சந்திக்க வரும் பெண் இருவருக்கும் மத்தியில் மாட்டிக்கொள்கிறார். அதன்பிறகு அந்தப் பெண்ணின் கதி என்ன என்பதை கமர்ஷியல் அயிட்டங்களைச் சேர்த்து சொல்லியிருக்கிறார்களாம்.

“சின்ன படம், பெரிய படம் என எனக்கு வரும் வாய்ப்புகளைப் பிரித்துப் பார்க்கமாட்டேன். இந்தப்படம் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய பலமாக இருக்கும்’’ என்கிறார் ஜனனி அய்யர்.

-ரா