ஆவடி சென்னை-65



யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், சுயம்புவாக சினிமாவைக் கற்றுக்கொண்டு களம் இறங்கும் இயக்குனர்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் ஜெய்நந்தா. படத்துக்கு ‘ஆவடி சென்னை- 65’ என்று டைட்டில் வைத்து, தனது சேலஞ்ஜ் மூவீஸ் சார்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கித் தயாரிக்கிறார்.

இவரது கதையைக் கேட்ட மேடவாக்கம் ராஜன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் நெல்லை தர்மா இணை தயாரிப்பாளராக இணைந்து இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளார். ஐந்து இளைஞர்கள் விளையாட்டாகச் செய்யும் செயல்கள் அவர்களது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

ஜெய்நந்தா, காளிதாஸ் மற்றும் மூன்று பேருடன் அறிமுக நாயகிகள் இரண்டுபேர் நடிக்கிறார்கள்இளையராஜாவின் இசைக் குழுவில் பயிற்சி பெற்ற ராஜா இசையமைப்பாளராக அறிமுக மாகும் இந்தப்படத்துக்கு பத்ராஜ் பாடல்கள் எழுதுகிறார்.‘செவிலி’ இயக்குனர் ரா.ஆனந்த் ஒளிப்பதிவில் முழுக்க முழுக்க ஆவடியிலே படமாக உள்ளது ‘ஆவடி சென்னை- 65’.