ஷிவதாவின் புதிய கோணம்!



‘நெடுஞ்சாலை’ ஹீரோயின் ஷிவதா நிறைய படங்களில் நடித்து வருகிறார். “தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருந்தபோது ‘ஜீரோ’, ‘அருவி’ படங்கள் கிடைத்தன. த்ரில்லர் கதை கொண்ட படமான ‘ஜீரோ’, என்னை வேறொரு கோணத்தில் காட்டும். ‘அருவி’யில் இதுவரை எந்த ஹீரோயினும் நடிக்காத வேடம். ‘மைல் ஸ்டோன்’ என்பதுபோல் என் கேரக்டர் அமைந்துள்ளது. கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன்.

அதற்காக நிறைய படங்கள் பார்க்கிறேன். அதுபோன்ற கேரக்டர்களில் நடித்த ஹீரோயின்களின் மேனரி சங்களை கவனிக்கிறேன். ஆனால், நடிக்கும்போது அவர்களைப் பின்பற்றாமல், டைரக்டர் சொல்வதற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டு நடிக்கிறேன். நடிப்பில் மற்றவர்களைக் காப்பியடித்தால் நிலைக்க முடியாது, முன்னேறவும் முடியாது. சொந்த திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்” என்கிறார்.