அலெர்ட் ஆண்ட்ரியா!



சிம்புவுடன் ஏற்கெனவே நடித்திருந்தாலும், பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில், சிம்புவிடம் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லையாம் ஆண்ட்ரியா. அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் காம்பினேஷன் சீன் இருந்தால், அங்கு தரப்படும் வசனங்களை மட்டும் பேசுகிறாராம்.

 பிறகு கேரவனுக்கு வந்துவிட்டால், கதவைச் சாத்திக்கொண்டு மவுனமாக இருக்கிறாராம். இதில் சிம்புவுடன் மீண்டும் அவரது முன்னாள் காதலி நயன்தாரா ஜோடியாக நடிப்பதால், ‘எதற்கு நமக்கு பொல்லாப்பு?’ என்று, சிம்புவிடம் இருந்து ஒதுங்கி விடுகிறாராம் ஆண்ட்ரியா. நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.